தமிழ்நாடு - நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆனால் மழை காரணமாக இந்த கப்பல் சேவை ஒரே வாரத்தில் ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகையிலிருந்து இலங்கையின் காங்கேயம் துறைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை - இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் மே 13ஆம் திகதி முதல் இந்த சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பு கங்காராம விகாரையில் இருந்து நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
'ரணிலுக்கு வழிவிடுவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த சைக்கிள் பயணம் பல மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்துடன் இப்பயணம் இணைக்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் யுதிகளுக்கு வேண்டும் முன்னணி உட்பட பல இளைஞர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
சமகி ஜன பலவேகவில் ஏமாற்றம் அடைந்துள்ள எம்.பி.க்கள் பற்றி கண்டறிந்து, அடுத்த சில நாட்களில் அவர்களை மீண்டும் கட்சிக்கு ஒன்று சேர்க்கும் ரகசிய வேலைத்திட்டம் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அவர்களின் பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள் வேலைத்திட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் மே தினக் கூட்டங்களில் அரசியலில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த இரகசிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியில் சஜபா எம்.பி.க்கள் குழுவொன்றும் இணைந்துகொள்ள வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் அபிவிருத்திப் பணிகளை இயன்றவரை முடிக்குமாறு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல்களில் பங்காளி அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட உடன்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலம் தேர்தல் காலமாக இருப்பதால் அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடாக 69 மில்லியன் ரூபா எம்.பி ஒதுக்கீடாக கிடைத்ததாகவும், அதற்குரிய நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தான் மட்டுமன்றி மற்றும் பல எம்பிக்கள் குழுவும் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாகவும், தான் உள்ளிட்ட சிலரின் பெயர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி அரசியல் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தமக்கு எந்த தடையும் இல்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புனித வெள்ளியன்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், ஏனைய விடயங்கள் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலிகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடன்படிக்கைகள் மீறப்படும் பட்சத்தில், பொஹொட்டுவவில் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் தினேஷ் குணவர்தனவை முன்னிறுத்தப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொஹொட்டுவவில் உள்ள பலம் வாய்ந்த ஒருவரின் வீட்டில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தார். இவரை பிரதமர் தினேஷ் குணவர்த்தன வரவேற்றார்.
ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும்.
அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.
இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப்பாதை), 15.2 கி.மீ நீளமான நீரோட்ட சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், சுவிட்ச் யார்ட், பயணப் பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டுமானங்களும் உள்ளடங்கியுள்ளன.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.
இருப்பினும், அந்த நேரத்தில் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. பின்னர் இலங்கை அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கான விஜயத்தில் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸிக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும்.
இன்று கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறு பாதைகள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு வரையிலான அதிவேக வீதி இன்று(24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றிரவு (23) விசேட ஊடக அறிக்கை ஊடாக தெரிவித்திருந்தார்.
இந்த காலப்பகுதியில் அதிவேக வீதியில் இருந்து பேலியகொடை, ஒருகொடவத்தை சந்தி, தெமட்டகொடை, பொரளை, D.S.சேனநாயக்க சந்தி, ஹோட்டன் சதுக்கம், ஹோட்டன் சுற்றுவட்டம், கிறீன் பாத், நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, புனித மைக்கல் வீதி, காலி வீதியில் இருந்து கோட்டை வரையான மார்க்கம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் வரையிலான மார்க்கம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மொரகஹஹேன, மில்லவ பகுதியில் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.