ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கு அழைப்பு விடுக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த, சட்டரீதியாக அழைக்கப்படக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
"கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார்.
அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார்.
“1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார்.
மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார்.
அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார்.
மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தாஇந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம்.
“இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார்.
மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார்.
மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுவாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார்.
''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர்.
“கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.கின்றார். கூறினார்.கியுள்ளது.கின்றனர்.
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பஸ் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் நிலையில், அடுத்த ஆண்டு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அதிக பணம் ஒதுக்கப்படும் என்றார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2,320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
மேலும், அடையாளமாக நியமனங்கள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான கையெழுத்திடும் திட்டம் கொழும்பு ஜே. ஆர். ஜயவர்தன மத்திய நிலையத்தில் நாளை (ஏப்ரல் 5) இடம்பெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதில் சுதந்திர ஜனதா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, சமகி ஜன பலவேக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளதுடன், சமகி ஜன பலவேகவுடனான உத்தியோகபூர்வ கூட்டணி தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் கட்சியின் கீழ் மட்டம் முதல் உயர் பதவிகள் வரை புதிய கூட்டணிகளில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் தமது கட்சியுடன் அவ்வாறே உள்ளதாகவும், ஆனால் கூட்டணியில் அடிப்படையில் சுதந்திர ஜனதா சபைக்கும் சமகி ஜன பலவேகவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய கூட்டணியின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக ஆதரவளிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசியும் கிடைக்கப்பெறுவதாகவும் அறியமுடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அநீதியான செயலுக்கு மிக விரைவில் பதில் அளிப்பதாகவும், கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் கொள்கையில்லாமல் தீர்மானம் எடுத்ததன் காரணமாகவே இன்று கட்சி வெற்றிப் பாதையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் எம்பிக்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மக்கள் சந்திப்புத் தொடரின் போது இந்த சந்திப்புகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த கலந்துரையாடல்கள் இந்த வாரம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரையில் தமக்கு அவ்வாறான அழைப்பு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை வாக்காளர்களின் வாக்களிப்பு நோக்கங்கள் குறித்து IHP நிறுவனம் பெப்ரவரியில் நடத்திய கருத்துக் கணிப்பு அறிக்கையின்படி, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனவரி மாதம் பெற்ற 50% வீதம் பெப்ரவரியில் 53% ஆக அதிகரித்துள்ளது.
அவர் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் சஜித் பிரேமதாச உள்ளார். அவருக்கு 34 சதவீதமும் மொட்டு கட்சிக்கு 7 சதவீதமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 சதவீதமும் உள்ளன.
பெண் ஒருவர் தனியாக பயணிக்க மிகவும் பொருத்தமான இடங்களில் இலங்கைக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
பிரபல 'டைம்அவுட்' இதழ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இரண்டாம் இடம் போர்த்துக்கலுக்கும், மூன்றாவது இடம் செக் குடியரசுக்கும், நான்காவது இடம் ஜப்பானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொது காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான HNB General Insurance, WTW இனை முக்கிய ஆலோசகராக செயற்படுத்துவதன் மூலம், WTW இன் ResQ Financial Reporter (FR) தீர்வை நடைமுறைப்படுத்திய முதல் உள்ளூர் பொதுக் காப்புறுதி நிறுவனம் எனும் பெயரை பெற்று, சர்வதேச நிதி அறிக்கை தரநிலை (IFRS) 17 இற்கு இணங்குவதற்கான தனது பயணத்தில் முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
WTW இன் ResQFR ஆனது, IFRS17 நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதற்கான, திறனான, நெகிழ்வான கட்டமைப்பை வழங்குகின்ற ஒரு தீர்வாகும் என்பதுடன், வெளிப்படுத்துகை தேவைகளையும் அது ஆதரிக்கிறது. ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அறிக்கை செயன்முறைகளை மேற்கொள்ளும்போது காப்புறுதி வழங்குனர்களுக்கு நேரத்தையும் வேலையையும் மீதப்படுத்துகிறது. IFRS 17 தரநிலையானது, 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.
இந்த புதிய தரநிலையானது, காப்புறுதிப் பொறுப்புகளை அளவிடுவதற்கும், நிதி அறிக்கையிடலில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் நியாயமான மதிப்பீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு காப்புறுதி வழங்குனர்களை கட்டாயப்படுத்துகிறது. HNB பொதுக் காப்புறுதியின், ResQFR புத்தாக்க தழுவலானது, சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகளை முன்கூட்டியே ஏற்றுக்கொள்வதற்கான அதன் சிறந்த உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. இந்த தொகுதியானது, IFRS 17 இன் கீழ் அதன் நிதி செயற்றிறனைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள் மற்றும் திறன்கள் மூலம் நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.
HNB General Insurance Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி, சித்துமின ஜயசுந்தர இது குறித்து தெரிவிக்கையில், “WTW இன் ResQFR தீர்வை தழுவுவதில், இலங்கையில் உள்ள பொதுக் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையில் முன்னோடியாக இருப்பதானது, எமது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். இந்த மூலோபாய முதலீடானது, IFRS 17 இன் இணக்கத்திற்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எமது நிதி வெளிப்பாடுகளில் துல்லியம் மற்றும் திறந்த தன்மையை உறுதி செய்கிறது. அதிகரித்து வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் பிரிவில் வழிநடத்துவதற்கும் எமது மூலோபாய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குI ம் ஒரு முக்கியமான சொத்தாக ResQFR இருக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.
நிதி அறிக்கைக்கான புதிய தேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், காப்புறுதித் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை IFRS 17 ஏற்படுத்துகிறது. HNB பொதுக் காப்புறுதியானது, ResQFR இனை ஒருங்கிணைப்பதன் மூலம், பல பலன்களைப் பெறும். மிகவும் வலுவான மற்றும் திறனான நிதி அறிக்கை, மேம்படுத்தப்பட்ட தரவு முகாமைத்துவம், பகுப்பாய்வு திறன்கள், நிதி வெளிப்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நிலையானதன்மை மற்றும் சந்தையில் போட்டித்தன்மை ஆகியன இவற்றில் அடங்குகின்றன.
HNB பொதுக் காப்புறுதி பிரதம செயற்படுத்தல் அதிகாரி நளின் சுபசிங்க இது பற்றி தெரிவிக்கையில், "WTW இன் ResQFR இனை நடைமுறைப்படுத்துவதானது, HNB பொதுக் காப்புறுதியின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. IFRS 17 இன் கீழ் துல்லியமான நிதி அறிக்கையிடலுக்கான சிறந்த தீர்வுகளை தழுவுவதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது. ResQFR மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க நாம் நன்கு தயார் நிலையில் உள்ளதோடு, எமது செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்றிறனையும் பேணுகின்றோம்." என்றார்.
WTW இந்தியா மற்றும் இலங்கையின் காப்புறுதி ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப தலைவர் விவேக் ஜலான் இது பற்றி தெரிவிக்கையில், "ResQFR ஆனது, கணிப்பீடு மற்றும் தரவு முகாமைத்துவ தீர்வாகும். இது IFRS 17 இன் சிக்கலான தன்மையை பொறுப்பேற்று பேணுவதால், காப்புறுதி நிறுவனங்கள் தமது வணிகத்தின் முக்கிய செயற்பாடுகளில் கவனம் செலுத்த முடியும். இது P&C காப்புறுதி வழங்குனர்களுக்கு IFRS 17 ஐ விரைவாக செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. HNB பொதுக் காப்புறுதியானது, WTW இனை தெரிவு செய்ததிலும், IFRS 17 இணக்கத்தை நோக்கிய அவர்களது பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக எமது தீர்வைத் தேர்ந்தெடுத்துள்ளமை தொடர்பிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், HNB பொதுக் காப்புறுதி அதன் நிதி அறிக்கையிடல் நோக்கங்களை திறம்பட அடைய முடியும் என நாம் நம்புகிறோம்." என்றார்.
HNB General Insurance பற்றி
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான, HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB General Insurance உறுதி பூண்டுள்ளது.
WTW பற்றி
WTW இன் காப்புறுதி ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பிரிவானது, உலகளாவிய ரீதியில் 35 சந்தைகளில் 1,600 ஊழியர்களைக் கொண்டு இயங்குகின்றது. இது முதன்மையாக காப்புறுதித் துறைக்கு ஆலோசனை, தீர்வுகள், மென்பொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்றது. நிதி மற்றும் ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல், நிறுவன இடர் மற்றும் மூலதன முகாமைத்துவம், M&A மற்றும் நிறுவன மறுசீரமைப்பு, தயாரிப்புகள், விலை நிர்ணயம், வணிக முகாமைத்துவம் மற்றும் மூலோபாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இடர் மற்றும் மூலதனத்தை நிர்வகிக்கவும், வணிக செயற்றிறனை மேம்படுத்தவும் போட்டி மிக்க நன்மைகளை உருவாக்கவும் அதன் ஆலோசனை சேவைகள் உதவுகின்றன.