web log free
May 06, 2025
kumar

kumar

 

தொழிலதிபரான தேசமான்ய ஹரி ஜயவர்தனவின் தலைமையின் கீழ் இயங்கும் இலங்கையின் மிகப்பெரும் பல்துறை கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Melstacorp PLC நிறுவனம், Ragama Melsta Hospital இலுள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மையத்தின் மூலம், மிகச் சிறந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Ragama Melsta Hospital இல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படும், தகுதியான சிறுநீரக நோயாளிக்கு மாதாந்தம் ரூ. 10 இலட்சம் (ரூ. 1,000,000) நிதியுதவியை வழங்கவுள்ளது.

ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படும் தகுதியுள்ள நோயாளிக்கு வழங்கப்படும் ரூ. 10 இலட்சம் பெறுமதியான அனுசரணையானது, குறித்த அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான செலவுகளில் 30% தொடக்கம் 35% வரையான செலவை ஈடுசெய்யும். ஒரு தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தின் நிதிப் பின்னணியில், குறித்த அறுவை சிகிச்சைக்கு ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில், ஒரு சுயாதீனக் குழுவொன்று ஒவ்வொரு மாதமும், மிகவும் தகுதியான நோயாளியை உன்னிப்பாக மதிப்பீடு செய்து தெரிவு செய்யும். அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கமைய, சுகாதார அமைச்சின் அனுமதியைத் தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுசரணையை இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நோயாளி பெறுவார்.

அண்மைக் காலமாக, இலங்கையில் சிறுநீரகம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கலான நடைமுறையுடன் தொடர்புடைய நிதிச் சுமையானது, அரசாங்க சுகாதார சேவைகளைப் பாதித்துள்ள பொருளாதார நிலைமைகளால் மேலும் மோசமடைந்து, பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த உயிர் காக்கும் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதை சவாலாக மாற்றியுள்ளது.

நாம் நேரடியாக அறிந்துள்ளோம். அதனாலேயே, Melstacorp PLC இன் தலைமைத்துவம் அதன் நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்த முடிவு செய்து, தகுதியான நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான இந்த தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது Melstacorp PLC நிறுவனத்தின் ‘Responsible Diversity’ (பொறுப்பான பன்முகத்தன்மை) எனும் பரந்த தூர நோக்குடன் ஒன்றிணைவதோடு, Melsta Health உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை அது எதிரொலிக்கிறது." என்றார்.

Ragama Melsta Hospital நிறைவேற்றுப் பணிப்பாளரும் Melsta Health நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் கே. தியாகராஜா இறைவன் இது பற்றி தெரிவிக்கையில், "இத்திட்டத்தின் தனித்துவமான விடயம் யாதெனில், இது ஒரு குறித்த காலப் பகுதிக்கு உட்பட்டதல்ல என்பதாகும். Ragama Melsta Hospital தனது சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மையத்தை முன்னெடுத்துச் செல்லும் வரை, தகுதியான நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்த உதவியை வழங்க நாம் உறுதியாக உள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒரு தகுதியான நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் மகிழ்ச்சியின் ஒரு பங்காளராக நாம் இருப்போம். சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு நிறுவனத்திற்கு மிகப்பெரிய கௌரவமாகும்." என்றார்.

2020 இல் தனது வர்த்தகநாம பெயரை மீள் வடிவமைத்ததிலிருந்து, Melsta Health நிறுவனமானது, அதன் Ragama Melsta Hospital வைத்தியசாலையை மேம்படுத்துவதற்கு அதிகளவான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம், அதன் மேம்பட்ட வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளில் 100% வெற்றி விகிதம் ஆகியவற்றிற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது தொடர்பில் Ragama Melsta Hospital பொது முகாமையாளர் திருமதி றொஷிற்றா நிரோஷன் தெரிவிக்கையில், "Melsta Hospitals உள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மையமானது, நாட்டில் காணப்படும் இவ்வாறான மையங்களில் மிகவும் மேம்பட்ட மற்றும் புகழ் பெற்ற மையங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஒரு பிராந்திய வைத்தியசாலையாக இருந்த போதிலும், யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரை நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் எமது வைத்தியசாலையின் மருத்துவ உதவியை நாடுவது, எமது வெற்றிக்கு மிகப் பெரும் சான்றாகும். மிக வெற்றிகரமான சிறுநீரக சத்திரசிகிச்சைகளுக்கு அப்பால், நோயாளிகளுக்கு

மிகவும் கட்டுப்படியான விலையிலான dialysis (குருதி சுத்திகரிப்பு) சேவையை வழங்குவதன் மூலம் சிறந்த சேவை மையமாகவும் புகழ் பெற்றுள்ளது. இந்த புதிய சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, தகுதியுள்ள இலங்கையர்களின் சுகவாழ்வுக்கான எமது பணி நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறோம்." என்றார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுசரணை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதை எளிதாக்க, 0776 137 142 எனும் பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை Ragama Melsta Hospital அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றி அறிந்து கொள்ள, அலுவலக நேரத்தில் (வேலை நாட்களில் மு.ப. 9.00 - பி.ப. 5.00) Melsta Hospitals மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம் அல்லது மருத்துவமனைக்கு நேரடியாக விஜயம் செய்யலாம்.

Melsta Health பற்றி: 

2017இல் நிறுவப்பட்ட இலங்கையின் பெருமைக்குரிய வணிக நிறுவனமான Melstacorp PLC நிறுவனத்தின் மூலோபாய விரிவாக்கமான Melsta Health, இலங்கையின் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது Melsta Hospitals, Melsta Laboratories, Melsta Pharmacy என 3 முக்கிய சுகாதாரப் பிரிவுகளில் செயற்பட்டு வருகிறது. அதி நவீன மருத்துவ வசதிகள், அதி நவீன தொழில்நுட்பம், நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம், சர்வதேச தரத்துடன் இணைந்த உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதை Melsta Hospitals நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேகமான ஆய்வுகூட வலையமைப்பான Melsta Laboratories, மேம்பட்ட நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், துல்லியமான மற்றும் சரியான நேரத்திலான அறிக்கைகளை வழங்குகின்றது. இதன் மூலம், நோயாளிகள் சிறந்த முடிவை பெற உதவுகிறது. சுகாதாரம் மற்றும் சுகவாழ்வு தொடர்பான இக்குழுமத்தின் விரிவான அணுகுமுறையை முழுமைப்படுத்தப்படுத்தியவாறு, இலங்கையர்களுக்கு உயர் தர மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கட்டுப்படியான விலையில் Melsta Pharmacy வழங்குகின்றது.

இந்த வணிகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை இலங்கையர்கள் தங்குதடையின்றி பெறுவதை உறுதி செய்வதற்கான தனது நோக்கத்தை நிறைவேற்ற Melsta Health தன்னை அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு வருடங்களாக கடுங்காவல் சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதற்கான விசேட உண்மைகள் எவையும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் உடல்நிலை மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு, அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் ஞானசார தேரரிடமிருந்து இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.

பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ 135 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை ரூ. 4,115. 

 5 கிலோ 55 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை ரூ.1,652.

2.3 கிலோ 23 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலை 772 ரூபா. 

மாவட்ட அடிப்படையில் விலைகளில் மாற்றம் ஏற்படும். 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபாவாக அமைந்துள்ளது.

லங்கா சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.புதிய விலை 245 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் லங்கா ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

 

“கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் என்னை திகைக்க வைக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்படி அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை அதில் வெளிப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்தத் தரவு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்பமுடியாது என்று மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அந்தத் தரவுகளின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “1974-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. அவர்கள் அரசியலுக்காக பாரத மாதாவை மூன்றாகப் பிரித்தனர்” எனக் கூறியிருந்தார்.

ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்திருக்கும் கச்சத்தீவினை பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவினை இலங்கை அரசின் பகுதியாக அங்கீகரித்தார்.

இதனிடையே, மார்ச் 15-ம் திகதி கன்னியாகுமாரியில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தினால் தான் தமிழக மீனவர்கள் இலங்கையிடமிருந்து இன்னல்களை சந்திக்கின்றனர்” என்று பேசியிருந்தார்.

இதனைக் கண்டித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் அப்பட்டமாக பொய் சொல்வதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கட்சத்தீவு (1974, 1976 ஒப்பந்தங்கள்) இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு மாநில அரசு நாட்டின் பகுதி ஒன்றை மற்றொரு நாட்டுக்கு கொடுக்கும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் அப்பாவியா” என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோன் தலைமையில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நீதி நடவடிக்கையானது பாதாள உலகமும் போதைப்பொருளும் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட பின்னரே முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட குற்றக் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்த நடவடிக்கையை பாதியில் நிறுத்தினால் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் எனவே சரியான புரிதலுடன் இதனை கையாள்வோம் என்றார். 

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் சபை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடனான தனித்தனி சந்திப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் இருக்கும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொஹொட்டுவ தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

அங்கு பசில் ராஜபக்ஷ பதவியேற்காமல் கட்சியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த சிரேஷ்ட எம்.பி.க்கள் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சுயாதீனமாக ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனையின் பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், இந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd