web log free
May 08, 2025
kumar

kumar

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்காக இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நேற்று (08) முற்பகல் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

செங்கடலைப் பாதுகாக்க கப்பல்களை அனுப்புவது பற்றி சமூக வலைத்தளங்களில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதுவரை சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தோனேசியாவில் கடந்த வாரமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் இடையூறு கொடுப்பனவை (DAT) இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 35,000 முதல் ரூ. 70,000.ரூபாவால் அதிகரிக்கவும் மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அவர்களின் ஆய்வு கொடுப்பனவில் 25% அதிகரிப்பு செய்யப்பட்டு, அவர்களின் ஜனவரி சம்பளத்தில் சேர்க்கப்படும் .

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கடந்த வாரம் நெலும் மாவத்தை மொட்டுக் கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே தகாத வார்த்தை மோதல் ஏற்பட்டு சண்டையில் இருந்து தப்பியது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் எனவும் அவர்களில் ஒருவர் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கட்சிக்கு என்ன செய்தீர்கள்?” என்று ஒரு எம்.பி.யும், “நீ அதைச் செய்தாயா இல்லையா?” என்று மற்றொரு எம்.பியும் கேள்வி எழுப்பிக் கொண்டனர். 

அத்தோடு நிற்காத எம்.பி.க்கள் பலத்த வாய் வார்த்தை மோதலுக்கு மத்தியில் உரத்த குரலில் திட்டிக் கொண்டதாக அறியமுடிகின்றது.

அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு வந்து இரண்டு எம்.பி.க்களையும் பிரித்து மோதலை சமரசம் செய்தனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

செங்கடலை அண்மித்த அரபுக்கடல், கல்ஃப் கடல் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் Prosperity Guardian நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு சமகி ஜன பலவேகவின் பலமான உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், நெருக்கடியான நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு மாகாணம், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, அண்மைய நாட்களில், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகயவில் இணைந்து கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக சமகி ஜன பலவேகய உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய எம்.பி.க்கள் சேர்க்கையால் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் போட்டி வலுத்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் சகோதரியின் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 3 நாட்களாக வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த நகைகள், வைரங்கள், இரத்தினக்கல் மோதிரங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.

அதிகாலை 1.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் பிரதேசவாசிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தகொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கொள்ளையிடப்பட்ட பொருட்களையும், சந்தேக நபரின் மனைவி மற்றும் மகளையும் பேலியகொடை ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை (08) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு கடன்பட்ட குடும்பங்களில் அறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

மொத்தக் கடனாளி குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாக உள்ளது. 

69,7800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாகவும் அதில் இரு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து இருநூறு பேர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்து கோரள தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022ஆம் ஆண்டிற்குப் பின்னர்) 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த வசந்த அத்துகோரள, பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகள் மூலம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார்.

இது தவிர வங்கிகளில் 97000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் அல்லது பொதுத் தேர்தலாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய ஜனாதிபதி பதவி அத்தோடு முடிவடையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அடிமட்டத்தில் எழுந்துள்ள விழிப்புணர்வை அறிந்து, அடுத்து எந்தத் தேர்தலை நடத்துவது என்ற சந்தேகம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

தேசிய மக்கள் சக்திக்கு பாதகமான தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (07) முதல் டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மட்டத்தில் தொடர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படுகிறது. 

இதன்படி, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த விசேட தேசிய மட்டத் தொடர் வேலைத்திட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.

மேலும், இலங்கை காவல்துறை, ஆயுதப்படை, சிவில் பாதுகாப்புப் படை, டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சமூக சுகாதார குழுக்களின் கிராமக் குழு உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd