எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19-ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பிறகு கிராம அலுவலர்களுக்குத் தேவைக்கேற்ப வழங்க வேண்டும்.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் ஒவ்வொரு பாடசாலைக்கும் தொடர்புடைய காலத்தில் மட்டுமே மூடப்படும்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கான பதிலை அறிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நாட்டினுடைய எதிர்காலத்தின் நிலையினை தீர்மானிக்கின்ற பெரும் பொறுப்பு நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில் 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசநாயக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றனர்.
அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சமகி ஜன பலவேகவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கற்களால் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதலுக்குப் பின் ஹக்கீமின் மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றி வளைத்து பாதுகாப்பு வழங்கினர்.
அக்குறணை பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் ஹக்கீமுக்கு எதிராக சத்தமிடப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரியைக் குறைக்கும் யோசனை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட யோசனைகளில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேரணையின்படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் குறைக்கப்படும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள பரீட்சைத் திணைக்களத்தில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை உறுதிப்படுத்தினார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளது. இதில் இம்முறை 3,23,879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
தமிழ் பிரிவில் 79000 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 2849 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டுமென மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் நேற்று(12) நள்ளிரவு முதல் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
பரீட்சை நிலையத்திற்குள் வௌியாட்கள் பிரவேசிக்க இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் பரீட்சைக்கு தேவையான பேனா, பென்சில் மாத்திரமே பரீட்சார்த்திகள் எடுத்துச் செல்ல முடியும்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் நொவெம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டமோ அல்லது தயாரோ இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோரிக்கை விடுக்கும் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும், எனினும், தற்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்த திட்டமும், ஆயத்தமும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய அரசாங்க விதிமுறையாக கருதப்படுகிறது.
இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது உரிய அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், பூங்காக்கள், புகையிரதங்கள் மற்றும் கடற்கரைக்கு மக்கள் பிரவேசிப்பதை தடை செய்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் 17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இன்று(12) காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இதற்கு முன்னர் கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு 736,589 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
இதனிடையே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கையினால் இன்றும் மாவட்ட செயலகங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு வாழ் மலையக மக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
இச்சந்திப்பானது, கொழும்பு விவேகானந்த சபை, மேட்டு தெரு கொழும்பு 13 இல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சுயாதீன அரச வழக்கறிஞர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதாக சஜித் இங்கு மீண்டும் வாக்குறுதியளித்தார்.