[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeவணிக செய்திஉலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலைகளையும் திருத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 85 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 80 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இதற்கு முன்னரும் இலங்கை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதே நிலைமை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதால், அது மக்கள் விரும்பாத தீர்மானமாக இருந்தாலும், உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சீரமைப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மேலும் சவாலாக அமையக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

spot_img

Latest articles

ரோகித் சர்மா ஓய்வு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா...

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

இலங்கையில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு

– இளைஞர்களிடமும் ஆபத்தான பரவல் 2022ஆம் ஆண்டுக்கான அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் 3,800 வாய்ப்புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3,000...

More like this

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...

இலங்கையின் 1ஆவது மொபைல் போன் ‘Tap & Pay’ கட்டண சேவை அறிமுகம்

இலங்கையின் டிஜிட்டல் வங்கித்துறையிலும் கார்ட் இல்லாத இலகுவான கட்டண முறைகளிலும் ஒரு புதிய புரட்சியைக் குறிக்கும் வகையில், BOC...

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.  இதற்கமைய,...