Homeவிளையாட்டு செய்திவெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

spot_img

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 

இங்கிலாந்து அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு புகாயோ சாகா அடித்த ​ஹெட்ரிக் கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். 

தொடர்ந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சாவும், 37 மற்றும் 45+1 நிமிடங்களில் புகாயோ சாகாவும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 

இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 48 மற்றும் 66 ஆகிய நிமிடங்களில் இரண்டு கோல்களையும், 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்து இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இருப்பினும், ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய புகாயோ சாகா, தனது 3-வது கோலை பதிவு செய்து ஹெட்ரிக் சாதனையுடன் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6′) பிரான்ஸின் உஸ்மானே டெம்பேலே ஒரு கோல் அடித்த போதிலும், அடுத்த இரண்டு நிமிடங்களில் (90+8′) இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 6-4 என்ற கணக்கில் முடித்து வைத்தார்.

1966-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி பெறும் மிகச்சிறந்த தரவரிசை (3-வது இடம்) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப்...

More like this

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே...

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...