[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திநாட்டின் ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டின் ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெளியான தகவல்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

2025ல் ஜனாதிபதி தங்கவில்லை; ஆனால் 3,089 பேர் தங்கியுள்ளனர் – தேசிய கணக்காய்வு அலுவலகம்

2025 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி எங்கும் தங்காத போதிலும், அவற்றில் பலவற்றில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக 2025 ஆம் ஆண்டில் ரூ. 32,982,675 செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், யாரும் தங்கியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளுக்கே மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ. 2,447,754 செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு ஜனாதிபதி மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

spot_img

Latest articles

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

More like this

“நீதித்துறையை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது”

– விமல் வீரவன்ச குற்றச்சாட்டு தற்போதைய அரசு நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – 55 வயதுடைய நபர் காயம்

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் மேலதிக...

நாமலின் திருமண விழாவுக்கு எதிரான மனு மீது விசாரணை

மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது...