உலகளவில் சினிமா பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே சுருங்கும்போது, தமிழ்நாட்டிலோ அது கலை, பண்பாடு, அரசியலுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது.
இப்பிணைப்பின் சான்றாக, 1967 முதல் 2026 வரையிலான 59 ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜோசப் விஜய் ஆகிய ஐந்து திரை ஆளுமைகள் தமிழகத்தின் முதலமைச்சர்களாக அரியணை ஏறியுள்ளனர்.
1918இல் ஆர். நடராஜ முதலியாரின் ‘கீசக வதம்’ எனும் முதல் மவுனப் படம் விதை போட்டது. 1931இல் வெளியான ‘காளிதாஸ்’ பேசும்படமாகப் பரிணமிக்க, சென்னைக்கு இடம்பெயர்ந்த தயாரிப்பு மையங்களால் ஜெமினி போன்ற பிரம்மாண்ட ஸ்டுடியோக்கள் உருவாயின.
1950களில் அண்ணாவும் கலைஞரும் சினிமாவைச் சமூகச் சீர்திருத்த ஆயுதமாக்கி, பல அரசியல் திருப்புமுனைகளை உருவாக்கியதோடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரு நட்சத்திரங்களையும் உருவாக்கினர்.
1980களில் கே. பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா ஆகியோர் சினிமாவை கிராமப்புற எதார்த்தத்துக்கு மீட்டெடுத்தனர். 1992இல் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் புரட்சியும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் எழுச்சியும் தமிழ் சினிமாவின் எல்லைகளை உலகளவுக்கு விரிவுபடுத்தின.



