Homeஉள்நாட்டு செய்திஇலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றும் மாபெரும் திட்டம்!

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றும் மாபெரும் திட்டம்!

spot_img

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றி, அதன்மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசாங்கம் மாபெரும் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டம், திருகோணமலை எண்ணெய் கிடங்கு வளாகத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.

புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வரும் 81 எண்ணெய் தொட்டிகளில் 29 தொட்டிகளை நவீனமயமாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இன்னும் மூன்று தொட்டிகளை புனரமைப்பதற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

துறைமுகத்திற்கு பெரிய கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் எண்ணெயை இந்த எண்ணெய் தொட்டிகளுக்கு மாற்றுவதற்காக புதிய குழாய் அமைப்பொன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான போயாவிலிருந்து இந்த குழாய் அமைப்பை அமைப்பதற்காக பிரைமா நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளின் ஒப்புதலும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் திருகோணமலை பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...