முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட நான்கு ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்




