Homeஉள்நாட்டு செய்திஇன்றைய வானிலை

இன்றைய வானிலை

spot_img

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. 

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகக் கொந்தளிப்பாகவோ காணப்படும். 

காங்கேசந்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, இக்கடற் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

வாகன இருக்கைப் பட்டை பொருத்தும் சலுகைக் காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை...

வாகன இறக்குமதியால் அரசுக்கு ரூ.896.4 பில்லியன் வரி வருவாய்

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் மோட்டார் வாகனத் துறையைப் பற்றிய முக்கிய ஆய்வறிக்கையான 2025/26 மோட்டார் வாகனத் தொழில்...

அகிலவிற்கு 18 ம் திகதி வரை விளக்கமறியல்

"முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், அலுவலக ஊழியர்கள் எனத் தெரிவித்து சேர்க்கப்பட்ட 4...

அகில விராஜ் கைது

முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட நான்கு ஊழியர்களைத்...

More like this

வாகன இருக்கைப் பட்டை பொருத்தும் சலுகைக் காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை...

வாகன இறக்குமதியால் அரசுக்கு ரூ.896.4 பில்லியன் வரி வருவாய்

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் மோட்டார் வாகனத் துறையைப் பற்றிய முக்கிய ஆய்வறிக்கையான 2025/26 மோட்டார் வாகனத் தொழில்...

அகிலவிற்கு 18 ம் திகதி வரை விளக்கமறியல்

"முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், அலுவலக ஊழியர்கள் எனத் தெரிவித்து சேர்க்கப்பட்ட 4...