இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களின் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதிச் செலவில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்கள் கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




