தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தெளிவான அரசியல் பழிவாங்கல் என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றுவார் என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியதாவது:
“இதோ பாருங்கள், நாமல் அவர்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அப்போது 12ஆம் திகதி ஆற்றவிருந்த உரையை நாமல் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிச்சயமாக ஆற்றுவார். இதோ பாருங்கள். நான் அவருக்கு அருகில் இருப்பேன்.”




