பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) கூட்டத்தில் கலந்துகொண்டு அமர்ந்திருந்த பெரும்பாலானோர் அரலிய குழும நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரலிய குழும நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் அரசாங்கத்தின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமது சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக பதிவுகளை வெளியிட்டதாகவும் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரலிய அரிசி ஆலை அரசாங்கத்திடம் கையகப்படுத்துவதற்காகச் சென்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டட்லி சிறிசேன ரயில் நிலையமொன்றைத் திறந்து வைத்தபோது கைதட்டி நின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வேலை செய்ய முடியாத வெறும் பேச்சு தலைவர்களுக்கு டட்லி சிறிசேன கற்பிக்கும் பாடம் குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் பிரசாத் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.




