ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கைகளுக்கு கேடு விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொன்சேகா தனது பதவியை பறிக்க போவதாகக் கூறி கட்சியின் தலைமை, பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் பல தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடை உத்தரவும் பெற்றுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குழுவின் கூட்டம் நேற்று பிற்பகல் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றதாகவும் அதில் பொன்சேகா சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
ஏசியன் மிரர் “புதிய பாதை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது, மருத்துவமனை ஊழியர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அடியாட்களின் நடவடிக்கைகளால் தான் தாக்கப்படுவதாக மருத்துவர் கூறினார்.
எக்காரணம் கொண்டும் மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் எனவும் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறையில் இடம்பெற்று வரும் பல மோசடிகள் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் எனவும் அந்த நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுடுவதற்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்கு நள்ளிரவில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை குறிப்பிடுகிறார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா, சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் என பாராளுமன்ற உறுப்பினர்ஐ எஸ்.எம். மரிக்கார் குறிப்பிடுகிறார்.
தாம் சமகி ஜன பலவேகவில் இருந்தால் கட்சியுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியுடன் இருந்தால் உடனே செல்ல வேண்டும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக இணையவுள்ள எதிர் கட்சி எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பிலும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது வெற்றியடையும் பட்சத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கலந்துரையாடலில் சமகி ஜன பலவேகவின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், அரசாங்க தரப்பில் இருந்தும் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இக்கலந்துரையாடலில், தேசிய அரசாங்கத்தின் அமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், அதனை விரைவில் முடிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.
சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றின் போது அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன் காரணமாக அரசியலமைப்பு மீறப்படுகிறது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்படுகிறது, நாட்டின் இறைமை மீறப்படுகிறது என வசந்த பண்டார தெரிவித்தார்.
அதன் காரணமாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
என்னைப் பொறுத்தவரையில், நடிகர் விஜய் அரசியல் உள்நுழைவதற்கான முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விஜய் அரசியலில் நுழைந்திருக்க வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணங்கள் இருக்கின்றன. விஜய்க்கு இரண்டு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வந்தன.
மத்தியில் பா.ஜ.க.வில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வந்தது. அதேபோன்று இங்கே தமிழகத்திலும் அவர் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
தி.மு.க வில் இளைய வாரிசு என்று திடீரென்று உதயநிதியை கொண்டு வந்து எதிர்கால முதல்வர் என்ற விம்பத்தை உருவாக்கி செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர் கிட்டத்தட்ட சினிமாவின் முழு கட்டுப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக தெரிகிறது.
அவரும் நடிகராக இருந்தவர். அவருக்கு இந்த விடயங்கள் தெரியும். சினிமாவில் இருக்கின்ற சகல பிரச்சினைகளையும் ஏறத்தாழ அவர் தான் கையாளுகின்றார் என்று தெரிகின்றது. இதில் விஜய்யின் படங்களும் உட்படுகின்றன.
மிகப் பிரமாண்டமான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனமே வெளியிடுகின்றது. அப்படிப் பார்த்தால் சினிமா துறையிலும் விஜய்க்கு நெருக்கடி வருகின்றது.
இந்த நெருக்கடிகளை எப்படி முறியடிக்க முடியும் என்ற பின்னணியில்தான் விஜய்யின் அரசியல் பிரவேசம் அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
கேள்வி - விஜய் அரசியலில் பங்கெடுக்கும் போது அது இலங்கை தமிழ் மக்களுடனான அவரது உறவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?
இலங்கை தமிழ் மக்கள் நிச்சயமாக விஜய்யை நேசிக்கின்றார்கள். இதற்கு நான் பல இடங்களில் சான்று பகிர்வேன். விஜய்யின் ரசிகர்களை நான் முல்லைத்தீவில் பார்த்திருக்கின்றேன்.
மனம் சோர்ந்திருக்கின்ற மக்கள் கூட விஜய்யை நேசிக்கின்றார்கள். மக்களுக்கு விஜய்யின் மேல் நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கையை விஜய் எந்தளவு தூரம் காப்பாற்றுவார் என்பதே எனது ஆதங்கமாக இருக்கின்றது.
இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டுமென்றால் அந்த நாட்டின் அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும். எனவே இதனை விஜய் எவ்வாறு அணுகுவார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
இது தொடர்பில் பெரிய மாற்றங்களை செய்யக் கூடிய இடத்தில் தான் விஜய் இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
தேசியவாத சிங்கள பௌத்த இனவாதி என்றும் புலிகளுக்கு எதிரானவர் எனவும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது தனது சித்தாந்தம் அல்ல என்றும், இவை அக்காலகட்டத்தில் எழுந்த பிரச்சினைகள் என்றும் அறிவிக்கிறார்.
மக்களை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது சித்தாந்தம் என ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகம் மற்றும் பிற நாடுகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்க சார்பு பொருளாதார மாதிரியை நமது நாடு இப்போது அகற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சுகாதார அமைச்சுடன் இணைந்து பாலர் பாடசாலை முதல் உயர்நிலைப் பாடசாலை வரையிலான குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை மார்ச் 7ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள குழந்தைகளுக்கான மன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்வி அமைச்சினை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாக இருந்தாலும், குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் புத்தகங்களை தயாரித்து முடிக்க முடியாத நிலையே மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளதுடன், பாடத்திட்டத்திற்கு அமைய புத்தகங்களை தயாரிக்கும் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அந்தப் பொறுப்பை அமைச்சு இதுவரை நிறைவேற்றாததால், சுகாதார அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக மன்றத்தின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
பாடத்திட்டத்தின்படி சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வரைகலை வடிவமைப்பு அன்றைய தினம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.