web log free
April 25, 2025
kumar

kumar

அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறிப்பாக அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என பாராளுமன்ற கூட்டத்திலும் ஐ.தே.க செயற்பாட்டாளர்களுடனும் ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கின்றார்.

எவ்வாறாயினும், தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தமாட்டார் என எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணாயிரம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளுராட்சி மன்றங்களை நடத்துவது கடினம் என ஜனாதிபதி அந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் 8,000 பிரதிநிதிகள் குறைக்கப்பட்டால், மாகாண ஆணையாளர்கள் நியமிக்கப்படும் போது தற்போதைய தலைவரை நியமிக்குமாறு ஒரு குழுவினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பசில் ராஜபக்ச ஆதரவளிக்க மாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது. 

2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவின் பதிவு செய்யப்படாத வாகனம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோர மரத்தில் மோதியதில் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து இடம்பெற்ற போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தை செலுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் முன்னர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், விபத்தின் போது வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்தார். 

2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான செயற்பாடுகளை கொரோனா மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். 

இந்த நிலையில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், மே - ஜூன் மாதமளவில் முழுமையான கள நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதள் பின்னர் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார். 

இலங்கையில் தற்கொலைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்த தவறான தரவுகளை திருத்துமாறு அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளதாக மனநல சுகாதார பணிப்பாளர் டொக்டர் ரொஹான் ரத்நாயக்க நேற்று (16) தெரிவித்தார்.

உலகில் தற்கொலை செய்து கொள்வதில் இலங்கை 30வது இடத்தில் இருந்த போதிலும், முதல் மூன்று நாடுகளில் இலங்கையையும் சேர்த்து உலக சுகாதார ஸ்தாபனம் தவறான தரவுகளை தயாரித்துள்ளதாக பணிப்பாளர் குற்றம் சாட்டினார்.

அவரைப் பொறுத்தவரை, சீக்கிரம் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் உலக நாடுகளில் இலங்கையின் நிலைப்பாடு வித்தியாசமாக இருந்தாலும், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு குறையவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரொஹான் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தற்கொலைகள் பதிவாகி வருவதாகத் தெரிவித்த பணிப்பாளர், 2022ஆம் ஆண்டில் 2833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்.

அந்த வருடத்தில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பான தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கம்பஹா மாவட்டத்தில் தற்கொலைகளில் அசாதாரண நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

66 சதவீத தற்கொலைகள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டதாகக் கூறிய அவர், 18 சதவீத தற்கொலைகள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.

நிதிப் பிரச்சினைகள், மனநோய், மதுப் பாவனை, உறவு முறிவு, குடும்ப நெருக்கடி, தாக்குதல், ஆண்மைக்குறைவு, தீராத வலி மற்றும் நோயினால், பெரும்பாலும் முதியவர்கள், யுவதிகள், கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். மருந்துகளை உட்கொண்டு பல்வேறு வழிகளில் தற்கொலை செய்து கொண்டார்.

2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில், 100,000 மக்கள் தொகைக்கு 15.6 சதவிகிதம் தற்கொலைகள் பதிவாகும் என்றும், தற்கொலை முயற்சிகள் 20 சதவிகிதம் பதிவாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தற்கொலைக்கு முயன்ற 90,000 பேர் கடைசி நிமிடத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாகவும் இயக்குனர் கூறினார்.

உலகில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார்.

ரொஹான் ரத்நாயக்க மேலும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சு 15 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொள்பவர்களை இனங்கண்டு, பூச்சிக்கொல்லிகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்குக் கற்பித்தல் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது. 

வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ரவிந்து சங்க டி சில்வா என்ற 'கழுதை மூஞ்சன்' என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளோம்.

வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும். எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் இறுதித் தீர்மானம் வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும். களுத்துறை பிரதேச சபைக்கானபுதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் திலக் வராகொட மற்றும் அதன் களுத்துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர் செனல் வெல்கம ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் பலரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதியான தேர்தல் ஆணையம் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள்ளும், மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எதிர் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மனு மே 12ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

மனுதாரர்கள் சார்பாக அனுராத வேரகொடவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஷிக் ஹாசிம் உடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியா ஆஜரானார். தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே ஆஜரானார். 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாவாகவும் விற்பனை விலை 346.33 ரூபாவாகவும் உள்ளது.

சில வர்த்தக வங்கிகளில் ஒரு டொலர் 335 ரூபாவாகவும் விற்பனை விலை 350 ரூபாவாகவும் உள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd