web log free
April 25, 2025
kumar

kumar

2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் தினசரி மின்வெட்டு நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்கட்டண உயர்வுடன் மின்தேவை குறையும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கம்பளை ATM இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பளை மற்றும் புத்தளத்தில் இருந்து தலா இரண்டு சந்தேகநபர்களும், கலஹா பிரதேசத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளதாகவும், அதில் இருந்த ரூ. 7.6 மில்லியன் ரொக்க பணம் மீட்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் பள்ளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கைப்பற்றினர்.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த போலீசார், மேலும் ரூ. 1.7 மில்லியன் ரொக்கம், ஒரு வேன், மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், இரண்டு சலவை இயந்திரங்கள், மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் எரிவாயு குக்கர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலும் பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், பல்வேறு நபர்களுடன் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொள்வதற்கு அந்தக் குழுவினர் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றிலும், இரண்டு தங்க நகைக் கடைகளிலும் இதற்கு முன்னரும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்களுடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் நேற்று இரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் பதிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விஷயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்திய விசா விண்ணப்ப மைய வளாகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (14) பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

நேற்று 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக எம்.பி.யை பொலிஸ் அதிகாரிகள் சந்தித்த போது, ​​உரிய ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அதனை மொழிபெயர்த்து பாராளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்த போது, ​​பொலிஸாரால் நீதிமன்ற அழைப்பாணை, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், நீதிமன்றில் இருந்து தமிழ் மொழியில் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு திஸ்ஸமஹாராம காவல்துறையில் கடமையாற்றிய குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உட்பட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்தாவிட்டால் இலட்சக்கணக்கான மக்களை வீதிக்கு இறக்கி பிரச்சினையை தீர்க்க தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆனால் அது அவரது நம்பிக்கையல்ல என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும், கொவிட்காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டத்தின் மூலம் கோரப்பட்ட எந்த மாற்றமும் இது வரை எட்டப்படவில்லை எனவும், அகிம்சை ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற வகையில் இது குறித்து தாம் வருந்துவதாகவும், வன்முறையை விரும்பும் சிலஅரசியல் குழுக்கள் இந்நாட்டைப் பொறுப்பேற்கிறோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் இந்நாட்டை ஆள்வது ராஜபக்ச நிழல் அரசாங்கமே என்பதனால், ராஜபக்சர்களினால் தூண்டப்பட்ட இனவாதத்தை அழித்து சகோதரத்துவம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், ராஜபக்சர்களின் இந்த நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகின் பிற நாடுகள் நமக்குப் பின்னால் இருந்தாலும், இந்நாடுகள் இப்போது நம்மை விட முன்னேறியுள்ளதாகவும், நாமும் அந்த வழியில் பயணிக்க ஒரு புதிய தொடக்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும், புதிய தொழில்நுட்ப போக்குகள் மற்றும் திட்டங்கள் மூலம் இளைஞர்களை வலுவூட்டி நாட்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd