web log free
December 15, 2025
kumar

kumar

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பதில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் அல்லது அவள் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது எனவும் கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக உள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம் எனவும் ,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல ,
இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகக் குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தலை நடத்தினால் மிகவும் நல்லது. ஆனால் இப்போது அது கடினம் என்று தெரிகிறது. ஏனென்றால் தபால் ஓட்டுக் கூட தேவையானா பேலேட் பேப்பர்கள் எங்களிடம் இல்லை.அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகள் கிடைத்த பிறகுதான் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமது ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுக்காக 60 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

OT கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, பணியாளர் அதிகாரிகளுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகளுக்கு (ரூ. 12.8 மில்லியன்), சேவைக்காகத் திரும்ப அழைக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் (ரூ. 2.2 மில்லியன்) மற்றும் அலவன்ஸுடன் கூடிய சாதாரண ஊதியம் (ரூ. 12.7 மில்லியன்) ஆகியவற்றுக்கான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இந்த நிதிக்கான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திறைசேரி தேர்தலுக்கு என மார்ச் 14 முதல் 100 மில்லியன் முதல் தவணையாக விடுவிக்கப்பட்டதை தவிர மீதி நிதி வழங்காமல் தடுமாறும் நிலையில் மேலதிக நேர நிதியை விடுவிக்க தேர்தல் ஆணைக்குழுவால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை கோமரன்கடவல பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் படி, கிரிந்தவில் இருந்து ரிக்டர் அளவுகோலில் 2.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை ஈக்வடோர் நில நடுக்கத்தில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்தனர். 

போராட்டத்தின் போது பெண்கள் பிரதான வீதியில் இருந்து உள்ளாடைகளை கழட்டி அகற்றி நாட்டின் சட்டம் ஒழுங்கை சீரழித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

எனவே, தேர்தலை நடத்துவதற்கு முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கூறும் அவர், தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் தற்போது சில நிர்வாகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாடு ஓரளவு ஸ்திரத்தன்மை பெற்று வருவதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் மக்கள் தீர்மானங்கள் அல்ல எனவும் அவர் கூறுகிறார்.

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 1 ஆம் கட்டத்தின் பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் பாடசாலை தவணை இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 திங்கட்கிழமை தொடங்கி மே 12 வெள்ளிக்கிழமை வரை தொடரும்.

பொதுத் தேர்வுக்கான இரண்டாம் கட்ட விடுமுறை மே 13 முதல் மே 24 வரை அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 வியாழன் முதல் ஜூலை 20 வியாழன் வரை அமுல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட விடுமுறை ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கந்தபளை பார்க் தோட்ட எஸ்கடல் தனியார் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று மாடி தேயிலை தொழிற்சாலை இன்று (18) காலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கந்தபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தபொல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மற்றும் நுவரெலியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக கந்தபளை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இங்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயினால் நாசமான சொத்துக்கள் தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யப்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தபளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில் பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், G.E.O.விற்கு கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை கற்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய ஆசிரியர் குழுவொன்றும் இம்முறை ஆசிரியர் இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு குழு தமது இடமாற்றங்களை அரசியல் பழிவாங்கல் என வர்ணிக்கத் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd