web log free
July 31, 2025
kumar

kumar

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.
 
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.
 
இலங்கை விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவை அடைந்துள்ளார்.
 
அங்கிருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணிலை எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிரங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும்  எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பிரேரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது. 

கொட்டாவ பஸ் நிலையத்தில் எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ பெரேரா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதனையடுத்து, ஜனாதிபதியும் அவரது மனைவியும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் இரவைக் கழித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விஐபி முனையத்தினூடாக பயணிகளை வெளியேறுமாறு குடிவரவு அதிகாரிகள் முத்திரையிட மறுத்துள்ளதாகவும், ஆனால் சாதாரண விமானப் பயணத்திற்கு பயணிகள் முனையத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தாலும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து அமெரிக்கா தூதரகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறாத நிலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றமை தொடர்பாக, இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்கனவே எரிபொருளுக்காக மக்கள் நாள் கணக்கில் வீதியில் நிற்கின்ற நிலையில், கிடைக்கின்ற எரிபொருளையும் தாமதப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமையுமாயின், மின்வெட்டு உட்பட்ட பல மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ள நேரிடும்.

தற்போதைய நிலையில் நாட்டின் நலன் கருதி அமைச்சரவையின் ஒத்துழைப்புடன், பிரதமர் விடயங்களை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

அலரி மாளிகைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் சிகிச்சையின் பின் வௌியேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
 
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார்.
 
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தற்போது கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd