நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்டறியும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் குழு கூடிய போதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் மாதாந்த அரிசி தேவை 200,000 மெற்றிக் தொன் எனவும், தற்போதைய அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் குழு தெரிவித்துள்ளது.
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
புதிய விலை விபரம் வருமாறு
Petrol Octane 92- Rs.420
Octane 95 - Rs.450
Auto Diesel- Rs.400
Super Diesel- Rs.445
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
விபரம் வருமாறு,
●. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சு
●. அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சு
●. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு
●. கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல் அமைச்சு
●. மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு வன வளங்கள் பாதுகாப்பு அமைச்ச
●. ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்ச
●. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு
●. ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சு
50,000 அமெரிக்க டொலரை தம்வசம் வைத்திருந்த ஒருவர் வெலிக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
36 வயதான ஒருவரே இவ்வாறு நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கடந்த 18-ந் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடைந்தது. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் பிரதமர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்
'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர் அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.' என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று போதியளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் டீசல் மற்றும் பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாகவும், தரையிறங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் பணம் செலுத்திய மற்றொரு கப்பல் கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே பெட்ரோல், டீசல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.
அடுத்த பத்து நாட்களில் மேலும் மூன்று எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்று வயிற்றில் இருந்த சிசுவையும் கொன்ற கணவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வயிற்றில் இருந்த குழந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை அகற்றப்பட்டது.
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகிய பின்னர் ஜி.எல்.பீரிஸ் போன்ற ஒருவர் பிரதமராக வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்சக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரை தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும், எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.