web log free
April 28, 2025
kumar

kumar

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சு பதவிகளை இராஜனாம செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்

இதில் நாடு இவ்வளவு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கும் போது ஏன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை , அலி சப்ரி ஏன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார், என்பதுதான் இன்று அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் என அறியமுடிகின்றது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது என அறியமுடிகின்றது .

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என்றும் நாட்டின் பணம் திரும்ப வரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர் , லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மக்கள் இலங்கையர்களுடன் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று அரசில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சுக்களில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளதாகவும் ஏசியன் மிரருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (04) தங்காலை கால்டன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை சுற்றிவளைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்க்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸ் தடைகளை மீறி மக்கள் கால்டன் வீடு நோக்கி சென்றுள்ளனர். 

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து ஹோமாகம பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி சப்ரியும், பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.

அத்துடன் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல்.பீரிஸூம் பதவியேற்றுள்ளனர்.

அரசாங்கம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு தேசிய நலனாக இணைந்து செயல்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கொடுத்துள்ள இந்த அழைப்பிற்கு எதிர்க் கட்சிகளிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

நாநாட்டில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மத்திய வங்கி ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இருவரும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இதற்கான கடிதங்களை பிரதமர் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd