அரசாங்க ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கினால் ஜனாதிபதி பதவியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் ஆட்சியை ஏற்பதானால் ஜனாதிபதி பதவியுடன் கூடிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.
பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இலங்கையின் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் மிக்கி ஆர்தரின் இரண்டு வருட ஒப்பந்தம் ஜனவரிலயில் முடிவடைந்ததை அடுத்து தற்போது காலியாக இருந்த பதவியை சில்வர்வுட் ஏற்றுக்கொள்கிறார்.
சில்வர்வுட் சமீபத்தில் இங்கிலாந்து ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார், ஆனால் பேரழிவு தரும் ஆஷஸ் தொடருக்குப் பிறகு நீக்கப்பட்டார், இங்கிலாந்து ஐந்து டெஸ்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தற்காக .
2022 டி 20 உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய தொடரைத் தொடங்குவதற்கு முன், இலங்கையுடனான அவரது முதல் பணி அடுத்த மாதம் பங்களாதேஷில் ஆரம்பமாகும் எனவும் தெரியவருகின்றது .
பேரூந்துகளுக்கு ஏற்றப்படும் ஆட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை வெளியிடுகிறது ,தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் முந்தியும் செலுத்தப்படும் ஆட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று தெரிவித்துள்ளது.
LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, பேருந்துகளுக்கு செலுத்தப்படும் டீசல் மண்ணெண்ணெய் போன்ற வாசனையை வெளியிடுகிறது.
சமீபத்தில் ஊடகங்களுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு டீசல் மாதிரிகளை காண்பிக்கும் போது, ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுகிறது ஆனால் மற்றொன்று இல்லை என்று கூறினார்.
நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் டீசலின் தரத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்றார்.
மாதிரிகள் விசாரணைக்காக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி தற்போது பாரிய அரசியல் நெருக்கடியாக மாறி சென்றுகொண்டிருப்பதாகவும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர் இதற்கு , மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் பாரதூரமான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளருக்கு அறிவிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
து.
மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கும் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாரடைப்பு நோயாளிகளுக்கு இரத்தத்தை கறைக்கும் streptokinase மற்றும் tenecteplase ஆகிய மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளில் அடங்கும்.
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளும் வைத்தியசாலைகளில் இல்லை என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
விபத்து சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. ஐ.சீ குழாய்கள் (IC குழாய்) மற்றும் இண்டர்கோஸ்டல் குழாய் மற்றும் சிறுநீர்க்குழாய் பற்றாக்குறை உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் மற்றும் வலி நிவாரணியான மோர்பின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்த பாரதூரமான சுகாதார அபாயத்தைக் கடப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, இரத்மலானையில் உள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு முன்னால் அதன் ஊழியர்கள், மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்து தட்டுப்பாடு குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, இன்றைய தினம் (09) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
விலங்குகளுக்கான உணவுப் பொருட்களின் விலையேற்றம், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கால்நடைத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
8 அன்று லிபர்ட்டி வளைவு அருகில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சிலர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் மற்றும் உலை எண்ணெய் பெறப்பட்டுள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் மின் வெட்டு மணித்தியாலங்கள் குறைவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தை பிரயோகம் தொடர்பில் கலந்துரையாடுமாறு சபாநாயகரிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததை அடுத்து பாராளுமன்றம் ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
SLPP பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சில எம்.பி.க்களின் மோசமான நடத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான வி ம்பத்தை உருவாக்கியுள்ளது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.
"ஒட்டுமொத்த நாடும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை சரியாகச் செய்ய முடியாவிட்டால், இந்த அமர்வை இடைநிறுத்துவது நல்லது. அவர்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிவரும் " என்று அவர் கூறினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன சபையை ஐந்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தினார்.
புத்தாண்டு காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தொலைதூர சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றின் ஆதரவுடன் போக்குவரத்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில், கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும், பின்னர் அது ஏப்ரல் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விடுமுறைக்கு வருபவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்காக சுமார் 172 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12 முதல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், கொழும்பில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிகளை ஏனைய மாகாணங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 578 தனியார் பேருந்துகள் நிஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.