web log free
April 28, 2025
kumar

kumar

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது .

இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்
சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெற்றது.

தலவாக்கலையில் திரண்ட மக்கள் வெள்ளம் ஆக்ரோஷ ங்களை அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுத்தினார். 

இன்று காலை 11 மணியளவில் தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியின் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்த பேரணி தலவாக்கலை நகரை அடைந்து பின்னர் நகரசபை மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது.

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காகவும்
ரூ.123 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் ரூ. 13 பில்லியன் இன்று விடுவிக்கப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு எனவும் ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்."

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார் .

நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

2022 பட்ஜெட்டில் ஆண்டுக்கான வரி விதிக்கக்கூடிய வருமானமான மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

வருடாந்தம் ரூ.2000 மில்லியன் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் இன்று காலை நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள  270,000 மெட்ரிக் டன் எரிபொருட்களில் ஒரு பகுதி இன்று இலங்கையை வந்தடைந்தது .
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் பெற்றோல் மற்றும் சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்ததக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தலா 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகின்றது .

நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அம்பத்தளை நகரில் உள்ள CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது எனினும் இந்த டீசல் மக்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை என தெரியவருகின்றது .

மேலும் 36,000 லீற்றர் கொண்ட ஆறு பவுசர்கள் இன்று அதே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரியவருகின்றது.எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அப் பகுதி மக்களால் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டது ,கடந்த ஏழெட்டு நாட்களாக டீசல் வரவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்

விசாரணையின் மூலம் புதிதாக திறக்கப்பட்டஇந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஜனாதிபதி செயலகத்தின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என தெரியவந்தது . குறித்த பிரத்தியேக செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய எரிபொருள் இருப்புக்கள் அம்பத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் நியமிக்கப்படுவார்கள், ஆனால் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சர்கள் மட்டுமே இருக்கும்.

இந்த அமைச்சரவைக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) தொடக்கம் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
 
அதற்கமைய, மீண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd