[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு

இலங்கையில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

– இளைஞர்களிடமும் ஆபத்தான பரவல்

2022ஆம் ஆண்டுக்கான அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் 3,800 வாய்ப்புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3,000 பேர் ஆண்கள் எனவும் தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் சமூகத் தரவு நிபுணர் மருத்துவர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

“புற்றுநோயற்ற நாளைய நோக்கி ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது வாய்ப்புற்றுநோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்பட்ட வாய்ப்புற்றுநோய், தற்போது 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமும் அதிகரித்து வருவது கவலைக்கிடமான போக்காக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாய்ச் சுகாதார ஆய்வில், பாவா, தூல் மற்றும் பொதியிடப்பட்ட பாக்கு ஆகியவை பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இப்பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவது எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெற்றிலைப் பாக்கு, மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிலையில் 28 வகையான புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்களும், பாக்கில் 4 வகையான புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களும் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும், தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் மேசன் தொழிலாளர்கள் வாய்ப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதே நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா பதிராஜ கூறுகையில், வாய்ப்புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்றும், வாயில் சிவப்பு அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகினால் புற்றுநோய் பரவுவதற்கு முன்பே சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

எனினும், வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக மிகவும் தாமதமாகவே மருத்துவமனைக்கு வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

Latest articles

ரோகித் சர்மா ஓய்வு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா...

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,...

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

More like this

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

2026 தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டிற்கான தேசியப் பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் http://nstt.moe.gov.lk இணையதளத்தின் ஊடாக ஆன்லைனில்...