இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த அறிவிப்பு இந்தியக் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பதவியை இராஜிநாமா செய்ததற்கான உத்தியோகபூர்வ காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் குழுவில் டென் டோஷ்கேட் மிக முக்கியமான உறுப்பினராக இருந்து வந்தார். இவரது விலகலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் விரைவில் மேலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், 2024-ல் கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது இணைந்த டென் டோஷ்கேட் தற்போது விலகியுள்ளதால், அவரது இடத்தை அடுத்து யார் நிரப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையேயும் கிரிக்கெட் விமர்சகர்களிடையேயும் அதிகரித்துள்ளது.




