நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்த தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாகப் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில், தவெகவின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ். பைரவி இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.
தவெக அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூரில் தங்கியிருந்த திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தங்கியிருந்த வீட்டின் முன்பு தமிழகக் காவல்துறை பலத்த பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




