“முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், அலுவலக ஊழியர்கள் எனத் தெரிவித்து சேர்க்கப்பட்ட 4 ஊழியர்களில் மூவரைத் தனக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தியமை, மற்றுமொரு ஊழியரைப் பதவிக்குரிய அலுவலகக் கடமைகளில் ஈடுபடுத்தாது, அந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ. 2,768,836.14 (இருபத்தேழு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு ரூபாய் 14 சதம்) தொகையைச் சம்பளமாகவும் படிகளாகவும் வழங்கி, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




