அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) 23 புதிய அலுவலகங்களை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மிகவும் மந்தமான நிலையில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், விசாரணை வலையமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பிராந்திய அலுவலக கட்டமைப்பை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




