நீர் பற்றாக்குறை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக தற்போது அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




