அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் டபுள் கேப் சூட்டி என அழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சீடர்கள் என்றும், அவர் டுபாயில் இருந்து ஐந்து பேரின் கொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டபுள் கேப் சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் வீரர் என்றும் கூறப்படுகிறது.
இந்த மூவரின் புகைப்படங்களுடன் இந்திய நாளிதழ் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (13) கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த வெளிநாட்டு பிரஜை காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்த குறித்த வெளிநாட்டு பிரஜையின் பராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுநுவர, மாவனெல்ல, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரகாபொல மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, இரத்தினபுரி, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) பிற்பகல் 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
15 வயதுடைய பாடசாலை மாணவியை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் பாலியல் வன்கொடுமை செய்த 32 வயதுடைய பாடசாலை மாணவர் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் மாணவர் பேருந்தின் உரிமையாளர் எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இம்மாணவி பாடசாலைக்கு பேருந்தில் வழமையாகச் செல்வதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதான டசாரதி இச்சிறு மாணவியை ஏமாற்றி அவளுடன் காதல் உறவைப் பேணி வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதியில் நாட்டை ஆளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடாகும் என மஹிந்த ராஜபக்ஷ நினைவுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் மூலம் நாட்டுக்கு உற்பத்தி பலன் கிடைக்காது என்பதை தனியார்மயத்திற்கு ஆதரவான தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நாட்டின் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 செல்சியஸ் பாகையாக காணப்படுகின்ற போதிலும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக 39 பாகை செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
08 வருடங்களின் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய வெப்பநிலை இதுவாகும் என பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் திலக் விஜயதுங்க பண்டார கூறுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் டயானா கமகே நேற்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விவாதத்தில் பிரபல வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டயானா கமகே தமக்கு தரப்பு வழங்குவதற்கும், அக்கட்சியின் பதவிகளில் இருந்து தன்னை நீக்குவதற்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்தக் கலந்துரையாடலில் தேவையான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி வெற்றிடமான தலைவர் பதவிக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை 09.30 மணிக்கு இலங்கை சிவசேனை தலைவர் மூதறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது.
காசாவுக்கு ஒரு நீதியா?இந்துக்களுக்கு இன்னொரு நீதியா?நிறைவேற்று நிறைவேற்று பசுவதைதடைச் சட்டத்தினை நிறைவேற்று, இலங்கை சிவபூமி முகமதியரே புனித சின்னத்தினை சிதைக்காதீர், பொஸிசாரே, பொஸிசாரே பசுத்திருடர்களை கைது செய், பசுக்கள் மீதும் இறை தூதர்களும், கைவைத்தால் அழிவாய், அறுக்காதே அறுக்காதே கோமாதாவினை அறுக்காதே, கோமாதாவினை வெட்டி இந்து சமயத்தவர்களின் மனதில் ஈட்டிபாய்ச்சாதே? என்ற பாததைகள் ஏந்திய வண்ணம் கோசங்கள் இட்டு தமது எதிர்ப்பு போட்டத்தினை முன்னெடுத்தனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவரும் ஆகிய கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பசுக்கொலைக்கு ஏதிராக தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றில் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா மீது கட்சியின் கவனம் குவிந்துள்ளது.