web log free
May 18, 2025
kumar

kumar

காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட 12 பேர் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்து காணப்பட்டதாகவும் கூறினர்.

இவர்களது உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொரலலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.

பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

ஹரக்‌ கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல்‌ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில்‌ இருந்து அழைத்துச்‌ செல்லவோ அல்லது இடம்‌ மாற்றவோ வேண்டாம்‌ என மேன்முறையீட்டு நீதிமன்றம்‌, குற்றப்‌ புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (15) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்‌ நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும்‌ சமத்‌ மொராயஸ்‌ ஆகியோர்‌ அடங்கிய நீதிபதிகள்‌ குழாம்‌, ‘ஹரக்‌ கட்டா’ என அழைக்கப்படும் நந்துன்‌ சிந்தக விக்ரமரத்ன தாக்கல்‌ செய்த மனு விசாரணை தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும்‌ வரை குறித்த உத்தரவு அமுலில்‌ இருக்கும்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் செப்டெம்பர்‌ 25 ஆம்‌ திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல்‌ உத்தரவை மேலும்‌ நீடிப்பதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி ‘ஹரக்‌ கட்டா தனது சட்டத்தரணிகள்‌ ஊடாக குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளார்‌.

பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்ற (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில், நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர் இடையே கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை குறித்த நேரத்தில் நடத்தாமை மற்றும் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் டேனியல் ஷெரியும் கலந்து கொண்டிருந்தார்.

 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கு இந்த மஞ்சள் நிற மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்தி சேவை வினவிய போது தெரிவித்தார்.

இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின் நாணயசுழற்சியை ஒத்திவைக்க நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மைதானத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டி ஒன்​றை சட்டவிரோதமாக மீள் இணைத்த சம்பவம் தொடர்பில் காலி பிரதான நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லஸ்ஸன.கொம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் உபபிரிவான லஸ்ஸன இன்னோவேசன்ஸானது, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் தன்னுடைய சமீபத்திய புதிய துவக்கத்தின் வாயிலாக ஒரு பாரிய மைல்கல்லினை எட்டியுள்ளது. டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வெளியேறும் வாயிலில் அமைந்துள்ளதுடன் வெளியேறும் பயணிகளிற்கு அவர்களது அன்பிற்குரிய இலங்கையின் வாசனைத்திரவியங்களை கொள்வனவு செய்யவும் அதனை வெளிநாடுகளிற்கு எடுத்துச்செல்லவுமாக வாய்ப்பினை அளிக்கின்றது. இலங்கையர்கள் தங்களது தாய்நாட்டின் சுவையினை விரும்பினாலோ அல்லது வெளிநாட்டினர் இலங்கையின் உத்தியோகபூர்வ சுவையினை விரும்பினாலோ, டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது அத்தகைய பன்முக வாடிக்கையாளர்களிற்கும் தேவையானவற்றை வழங்குகின்றது.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் திறப்புவிழாவானது அதனை துவக்கி வைத்த இலங்கை விமானநிலைய மற்றும் விமானச்சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீஏ சந்திரசிறி மற்றும் லஸ்ஸன குழுமத்தின் தலைவர் / முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே மற்றும் பணிப்பாளர் பேரா. நீலிகா மாளவிகே மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்களுடன் பெருமைப்படுத்தப்பட்டது. இவ்வணிக வளாகத்தின் திறப்பு விழாவானது இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் என இருவருக்கும் இலங்கையின் செழுமையான வாசனைத்திரவியங்கள் மற்றும் சமையற்கலை நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தும் ஒரு மைல்கல்லாக அமைகின்றது.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்டங்களானவை இலங்கையின் கறுவா, மிளகு, ஏலக்காய், கராம்பு, மாசி மற்றும் ஏனைய கவனமாக தேர்வுசெய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளடங்கிய இலங்கையின் சிறப்பான நறுமணப்பொருட்களை கொண்டு கைகளால் கவனமாக தயாரிக்கப்பட்டனவாகும். இவ்வுயர்தர, ஏற்றுமதி தரத்திலான தின்பண்டங்களானவை மகிழ்ச்சிகரமான சமையல் அனுபவங்களை உறுதிப்படுத்தும் விதமாக, உள்ளுர் மற்றும் சர்வதேச நிபுணர்களது கூட்டு முயற்சியின் ஊடாக உருவாக்கப்பட்டனவாகும்.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்ட எல்லைகளிற்கு மேலதிகமாக, கொக்கிஸ், கவும், களு தொதல், எள் ரோல், பெனி கஜு, தேங்காய் டொவ்பி மற்றும் பலாப்பழ நொறுக்குகள் மற்றும் ஏனையன போன்ற பாரம்பரிய இலங்கை தின்பண்டங்களது பன்முகப்பட்ட தேர்வுகளிற்கும் இவ்வணிக வளாகம் வாய்ப்பளிக்கின்றது. லே டிரீட்ஸ் குக்கிஸ், டீ டைம் குக்கிஸ், சொக்கலேட் துண்டங்கள் மற்றும் ஆர்டிசன் சொக்கலேட்ஸ் உள்ளிட்ட லஸ்ஸன இன்னோவேசன்சின் லே டிரீட்ஸ் உற்பத்தி கூறுகளையும் வாடிக்கையாளர்கள் புதிதாக திறக்கப்பட்ட வணிகவளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

லஸ்ஸன குழுமத்தின் தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே அவர்கள், விமான நிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், “டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் எனும் வர்த்தக நாமங்கள் இலங்கையின் உத்தியோகப்பூர்வ சுவைகளை உலகிற்கு கொண்டுசெல்லும் எமது அர்ப்பணிப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நூறு சதவீதம் உள்ளுரில் மேற்கொள்ளப்பட்ட எமது வியாபாரம் குறித்தும் அனைத்து உலகளாவிய பின்னணியிலான தனிநபர்களிற்கும் எமது சுவைநயங்களது அபரிதமான சுவையையும் கைவினைத்திறத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் எமது அர்ப்பணிப்பினையும் முன்னிட்டு நாம் பெருமையடைகின்றோம்.” என்றார்.

லஸ்ஸன இன்னோவேசன்ஸின் செயற்றுறை தலைவர், யுகந்தா சூரியாராச்சி அவர்கள், தங்களது உயர் தரம் மற்றும் தனிச்சிறப்பான சுவை என்பவற்றை சிறப்புறுத்தி, டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் வர்த்தக நாமங்களது தனித்தன்மைகளை விளக்கி உரையாற்றினார். “எமது தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் நாவில் சுவையூறும் புத்துணர்ச்சி சுவையினையும், சுவையூட்டிகளது ஈர்க்கும் நறுமணங்களையும், மற்றும் இலங்கை சுவையூட்டிகளது பேணப்பட்ட ஆரோக்கிய நலன்களையும் வெளிப்படுத்தி உச்ச சுவையுணர் அனுபவத்தை அளிக்கின்றது” என்றார் சூரியாராச்சி அவர்கள்.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தன்னுடைய உலகறிந்த சுவையூட்டிகளிலிருந்து அதிசிறந்த சுவையான உணவுகளை வடிவமைப்பதிலான தேசத்தின் நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்தி இலங்கையின் சயைமயற்கலையை சர்வதேச சந்தைக்கு பரிசளிக்கும் எண்ணத்தை மீளாக்கம் செய்வதினை நோக்காகக் கொண்டுள்ளது. பல வருட கடின உழைப்பும் தொழில் வேட்கையும் மிக்க, லஸ்ஸன இன்னோவேசன்ஸானது இக்கனவிற்கு டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் வர்த்தக நாமத்தினால் உயிரூட்டியுள்ளது.

உயர் தர நிர்ணயங்களை உறுதிப்படுத்துவதில், டிரீட்ஸ் ஒவ் சிலோனின் அனைத்து உற்பத்திகளும் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சிறப்பான மூலக்கூறுகளை பயன்படுத்தி அதிநவீன கூடங்களிலேயே உற்பத்திசெய்யப்படுகின்றன. டிரீட்ஸ் ஒவ் சிலோனின் உற்பத்திகளை உண்மையில் அதிசிறப்பானவையாகவும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவையாகவும் உருவாக்க, கடுமையான சர்வதேச தர நிர்ணயங்களை உற்பத்தி செயன்முறை கைக்கொள்கின்றது. உற்பத்திகள் மத்திய கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய சந்தைகளிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதிச்செய்யபடவிருந்தாலும், உள்ளுர் உபயோகத்திற்காக லஸ்ஸன.கொம், லஸ்ஸன புளொரா சில்லறை வணிக மையங்கள் மற்றும் நாடு முழவதிலுமான முன்னணி சூப்பர்மார்க்கெட் தொடர்களிலும் கிடைக்கப்பெறுகின்றன.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd