web log free
May 18, 2025
kumar

kumar

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை உள்ளூராட்சி அமைச்சரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

27-06-2023 அன்று வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் மீறப்படும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஒரு காலத்திற்கு திரும்ப அழைக்க அதிகாரம் உள்ளது.

இதன்படி, கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளப்பெற முடியும் எனவும், உள்ளுராட்சி மன்றங்கள் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அறிவிக்கப்பட்டவாறு உரிய வாக்கெடுப்பை நடத்த முடியாத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம் அரச நிறுவனங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். இந்த அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றம் ஜூலை 1ஆம் திகதி கூடும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் பல கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாட்டில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்ட அவர், நேற்று (27) பேர்த்தில் இலங்கையர்களின் சந்திப்பில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தார்.

எம்.பியின் அவுஸ்திரேலியா விஜயத்திற்காக இரண்டு விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தங்குவதற்கு இரண்டு ஹோட்டல்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக எம்.பி., நண்பரின் தனி வீட்டில் தங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரவின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு சேவை ஒன்றின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எம்.பி.யை மாநாட்டுக்கு அழைத்துச் செல்ல கட்சியினர் பங்கேற்கும் பாதுகாப்பு வளையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார். 

பிரதமா் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் லாா்ட்ஸ் அரங்கத்தில், பிரிட்டன் தமிழ்ச் சங்கம், சங்கமம் யுகே ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் இவ்வாறு கூறினார்.  

இலங்கையில் நிலவும் பிரச்னை சுமாா் 80 முதல் 85 ஆண்டுகளாக உள்ளது. 2009 இலங்கைத் தமிழா்கள் வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அப்போதைய காங்கிரஸ் அரசு.கடந்த 9 ஆண்டுகளில், பிரமதா் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

யாழ்ப்பாண கலாசார மையத்தைப் புனரமைத்துக் கொடுத்துள்ளது. கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை-பலாலி விமான நிலையம் இடையே தினசரி விமான சேவை நடைபெறுகிறது. காரைக்கால்-காங்கேசன்துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்.

அண்மையில் பொருளாதார பாதிப்படைந்த இலங்கைக்கு, 3.8 பில்லியன் டாலா் அளவிலான கடனுதவி, 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவுப் பொருள்கள் என உதவி, இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியது இந்திய அரசு.ஈழத்தில் மிகவும் அபாயகரமான விகிதத்தில், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்த மாற்றங்களை தடுக்க இலங்கை அரசுடன் இணைந்து பிரதமா் மோடி முனைப்புடன் பணியாற்றி வருகிறாா்.

தமிழா்களின் தொல்லியல் தலங்கள், தமிழா்களின் தனித்துவமான கலாசாரம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்துபவை. யாழ்ப்பாணத்தில் பெருமளவில், பௌத்த தொல்லியல் தலங்கள் உருவாகி வருவதால், பிற்காலத்தில், தமிழா்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையே அமைதியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இலங்கை ராணுவம், தமிழா் பகுதியில் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து முகாம்கள் அமைத்திருக்கின்றன. ஈழத் தமிழா்களின் பிரச்னைகள் குறித்து, இலங்கைப் ஜனாதிபதிக்கு கொண்டு செல்லும் முயற்சியின் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, மத்திய மலையகப் பகுதியிலிருந்து செந்தில் தொண்டைமான் எனும் தமிழா், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று பிரதமா் மோடி, தனது இலங்கைப் பயணத்தின்போது வலியுறுத்தினாா் என்றாா் அவா். 

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

காயமடைந்த நபருடன் மேலும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) உள்ளிட்ட மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிதியங்களின் அங்கத்துவ இருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

கடந்த காலங்களில் செலுத்தப்பட்டுள்ள அதிக ஓய்வூதிய நிதி கொடுப்பனவு வீதங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கூறினார். 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கோ, எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கோ பாதிப்பு ஏற்படாது என கம்பஹா மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் மேற்பட்ட வங்கி வைப்பீட்டாளர்களின் எந்தவொரு வைப்புகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் வங்கி வைப்புகளுக்காக செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார். 

வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைகளை  இன்று (28) நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதேவேளை, பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்து, சபாநாயகர் இன்று பிற்பகல் அதிவிசேட வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார்.

நிலையியல் கட்டளை 16-இன் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மவுஸ்ஸகலே பிரதேசத்தில் சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் Capital Investment LLC நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள காணியொன்றையும் அதே நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் சுவீகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் கேள்விக்குரிய நிலம் மற்றும் தீவின் மூலதன முதலீட்டு LLC ஆகியவற்றைப் பயன்படுத்தி ஹோட்டல் வளாகம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனங்களின் ஒப்புதலைப் பெற்று உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில், இது தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். 

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் 500 மில்லியன் டொலர் வரவு செலவுத் திட்ட உதவிக்காக உலக வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் இதுவே மிகப் பெரிய தவணை நிதி என்று கூறப்படுகிறது. 

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் ஆற்றல்மிக்க மற்றும் நெகிழ்ச்சியான வங்கித் துறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, அடையாளம் காணப்பட்ட திருத்தங்கள் உட்பட தொடர்புடைய வங்கிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பாரம்பரியமிக்க வரலாற்றுடன் ஆயுர்வேத அழகுசாதன பொருட்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற, நெச்சுரெல்லெ சிலோன், இலங்கை பெண்களது அழகினை மெருகூட்ட வடிவமைக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களது புதிய வீச்சினை அறிமுகப்படுத்துவதில் பெருமைக்கொள்கின்றது. மதிப்பிற்குரிய ஆயுர்வேத வைத்தியர் சிஎஸ்எஸ் த சில்வா முதன் முதலாக நெச்சுரெல்லெ நிறுவனத்தை ஆரம்பித்த 1986 ஆம் ஆண்டு முதலான பாரம்பரியம் முதற்கொண்டு, நிறுவனமானது இலங்கையின் நவநாகரீக மங்கையரின் தேவைகளை பூர்த்திசெய்யும் சிறப்பான பொருட்களை புத்தாக்கமாக வழங்குவதனை தொடர்கின்றது.

இப்பரப்பரப்பான நாளாந்த வாழ்க்கை முறையில் தங்களது அழகினை பேணுவதில் இலங்கைப் பெண்களால் எதிர்கொள்ளப்படும் சவால்களை அறிந்த, நெச்சுரெல்லெவானது அவர்களிற்கு உதவ பொருத்தமான பல்வேறு உற்பத்திகளினை திறந்துள்ளது. வல்லாரை, கருவேப்பிலை மற்றும் பூண்டு, அகத்தி, பாகற்காய், கீழாநெல்லி, முடக்கத்தான், கராம்பு மற்றும் மஞ்சல் குளிசைகள் உள்ளிட்ட பன்முக குளிசை தெரிவுகள் ஆரம்ப உற்பத்தி வரிசையை உள்ளடக்குகின்றது.

தங்களது தலை முடியை பராமரிக்கும் அவர்களது அர்ப்பணிப்புகளிற்கு இசைவாக, நெச்சுரல்லேவானது கேசறு ஷாம்பூ, கன்டிஷனர், மற்றும் ஊட்டமளிக்கும் தலைமுடி எண்ணெய் உள்ளடங்கலான பல்வேறு வகையான உற்பத்திகளை அறிமுகப்படுத்துகின்றது. அவர்களது பிரிய சொத்துக்களிற்கென கலவையாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகளுடனான இத்தலை முடி பராமரிப்பு பொருட்களானவை முடிக்கு ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் வழங்குகின்றன.

முழுமையான அழகிற்கான நெச்சுரெல்லாவின் அர்ப்பணிப்பானது, பொருத்தமான லோஷன், பூச்சுக்கள் மற்றும் முக தூய்மையாக்கிகள் தெரிவுகள் என சரும பராமரிப்பிற்கும் விரிகிறது. சருமத்திற்கு முக்கியமாக ஈரப்பதனையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் ரோஸ் மொய்ஸரைசிங் பொடி லோஷன் மற்றும் வெனிவெல் மற்றும் மஞ்சள் பொடி லோஷன் என்பவற்றை உள்ளடக்கியதாக லோஷன்கள் பரந்துபடுகின்றன. பூச்சுக்களது பரப்பானது குங்குமாதி கிரீம், லிகொரைஸ் டே கிரீம், லிகோரைஸ் நைட் கிரீம், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் குளோவ் மட் பெக், மற்றும் பிக்மென்டேஷன் கிரீம் என்பவற்றை உள்ளக்குகின்றது. இக்கிரீம்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் ஊட்ட செறிவுகளிற்காக பெயர்பெற்ற மூலிகைகளது சக்தியினை பாதுகாப்பதுடன் தீங்குமிக்க சூரிய கதிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அசுத்தங்களிலிருந்து சருமத்தினை காக்கின்றன.

ஒரு முழுமையான சரும பராமரிப்பு ஆளுகையின் நிமித்தமாக, பேஷ் வாஷஸ், கிளீன்சர்ஸ், டோனர்ஸ் மற்றும் ஸ்கிரப்ஸ் எனும் தொடரினை உள்ளடக்கும் முக பராமரிப்பு பொருட்களை நெச்சுரல்லெ வழங்குகின்றது. மென்மையாக சுத்தம்செய்து, புத்துணர்ச்சி வழங்கி, சருமத்தினை புத்துயிர்ப்பெறச்செய்யும் வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் பேஷ் வாஷ், நீம் மற்றும் தேயிலை மர பேஷ் வாஷ், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் கிளீன்சர், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் டோனர் மற்றும் வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் ஸ்கிரப் ஆகியவற்றினை கண்டறியுங்கள்.

அனைத்து நெச்சுரலா உற்பத்திகளும் செயற்கை இனிப்புக்கள், பதனாக்கிகள் அல்லது நிறமூட்டிகள் என்பனவற்று இயற்கையான மூலிகைச் சாறுகள் மற்றும் தூள்களினைப் பயன்படுத்தி உன்னதமாக தயாரிக்கப்பட்டனவாகும். கம்பனியானது உயர் சர்வதேச நியமங்களை கடுமையாகப் பின்பற்றுவதுடன், உற்பத்தி செயன்முறையில் தொழினுட்ப மற்றும் இயந்திர நவீனத்துவங்களையும் பயன்படுத்துகின்றது. பயிற்றப்பட்ட வைத்தியரின் உற்பத்தி மேற்பார்வையுடனும்; உள்ளடக்கங்களின் தரங்களை உறுதிப்படுத்துவதற்கான வைத்தியர்கள் மற்றும் இரசாயனவியலாளர்களால் நடாத்தப்படும் பரிசோதனைகளின் ஊடாகவும், அதிசிறந்த நிலைக்கான தன்னுடைய அர்ப்பணிப்புக்களை நெச்சுரலெ நிலைநிறுத்துகின்றது. பொதியிடலிற்கு முன்னதாக மேலதிக தர உறுதிப்பாட்டு நடவடிக்கைகளும் தொழினுட்ப வல்லுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.

மூலிகை அழகு பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு உற்பத்திக்கான நெச்சுரெலாவின் உற்பத்திக்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கம்பனியின் உற்பத்தி பிரிவானது ஆயுர்வேத மருந்தகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்தி பொருட்களது கடுமையான தர நியமங்களை பூர்த்திசெய்கின்றமைக்கான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தும் விதமாக, புஆP மற்றும் ர்ஊஊP சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

நெச்சுரெலா சிலோன் நிறுவனமானது தங்களது இயற்கை அழகினை தழுவிக்கொள்ளவும் அதனது புதிய அழகு சாதனப் பொருட்களுடனான ஆயுர்வேதத்தின் நிலைமாறு சக்தியினை அனுபவபூர்வமாக உணரவும் இலங்கையின் மங்கையரை அழைக்கின்றது. நெச்சுரெலாவினை அறிந்து பிரகாசிக்கும் அழகின் இரகசியத்தை கண்டடையுங்கள்.

பட விளக்கம்: (இடமிருந்த வலமாக)

சாமிக்க விமலசிறி – SGS லங்காவின் தேசிய முகாமையாளர், தர்ஷன டயஸ் - தொழிற்சாலை முகாமையாளர், ஒளசத லங்கா (தனி.) லிமிட்., ஆயுர்வேத வைத்தியர் பிரியதர்ஷன பெந்தோடாராச்சி – பிரதம நிறைவேற்று அதிகாரி, ஒளசத லங்கா (தனி.) லிமிட்., பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd