web log free
May 08, 2025
kumar

kumar

இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 இன் விலை லீற்றருக்கு 40 ரூபாவும், பெற்றோல் 95 இன் விலை லீற்றருக்கு 30 ரூபாவும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 92 ரக பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் தமது பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வர்த்தமானி உட்பட அனைத்து தினசரி அச்சு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தமானி உள்ளிட்ட அரசு தொடர்பான பிற அச்சிடும் நடவடிக்கைகளில் அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அச்சிடும் செலவை முடிந்தவரை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

அரசாங்க அச்சகத்திற்கு தேவையான பேப்பர், மை, தட்டுகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதில் உள்ள சிரமமே இந்த நிலைக்கு முக்கிய காரணம் எனவும் விநியோகம் செய்வோர் பலவிதமான விலைகளை வழங்குவதும் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சு இயந்திரங்களுக்கு தேவையான கூடுதல் உபகரணங்கள் வெளிச்சந்தையில் இருந்து கிடைக்காததால் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அறியமுடிகிறது.

இந்நிலைமையினால் எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்கப் பத்திரிகையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சடிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் அடங்கிய பட்டியலில் உள்ளதால், இந்த நிலையை தவிர்க்க உடனடி தீர்வு கிடைக்காவிட்டால், அச்சடிப்பு நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் செய்ய வேண்டிய அச்சுப் பணிகளுக்கு தேவையான எழுதுபொருட்கள் மற்றும் மைகள் இல்லாதது கடும் சிக்கலாக உருவெடுத்துள்ளதுடன், தேர்தலுக்கான செலவுகள் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதால், வரலாறு காணாத அளவு பணம் செலவிடப்படும்.நடக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலைமை அனைத்து பிரிண்டர்களையும் பாதித்துள்ளதாக பிரிண்டர் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் (சனிக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தம்பதி உறங்கிய அறை அதிகாலை 4 மணியளவில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஒக்டோபர் மாத இறுதிக்குள் மீண்டும் அரசியல் சுனாமி வரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகின்றார்.

மக்கள் சுனாமி ஊழல் அரசியல்வாதிகளை வேரறுக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாலும், அடுத்த கட்டத்தை ஏழை மக்கள் முன்னின்று நடத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தாய் இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

கடற்றொழில் செய்து வரும் தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை எனவும் பிள்ளைகளுடன் அடிக்கடி பட்டினி கிடப்பதாகவும் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நூறு ரூபாய்க்கு வாங்கிய வாழைப்பழங்கள் தான் கடைசியாக சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர்களுக்கு மதிய உணவும், உலர் உணவும் வழங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

பெண்ணின் கணவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு 65 வருடங்கள் கடந்துள்ள போதிலும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சாசனம் மற்றும் அது தொடர்பான சட்டதிட்டங்களுக்கு அமைவாக தேசியக் கொள்கையொன்றைத் தயாரிக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பராமரிப்புக் கொள்கைக்காக 2019 மார்ச் 6 ஆம் திகதி அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட போதிலும், இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி வரை கொள்கை அளவில் செயல்படுத்தப்படவில்லை.

தேசிய விதிமுறைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க, அனாதைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்குவதே திணைக்களத்தின் நோக்கமாகும்.

இங்கு மாற்று பராமரிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த 08 மாகாண செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் கணக்காய்வுக்கு தெரிவித்துள்ளது.

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன், புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். 

குறித்த மாணவன் புகையிலை போதைப்பாக்குடன் வந்திருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தெரியப்படுத்தியிருந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சிறுவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற ஊர்காவல்துறை சிறுவர் பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவரை அச்சு வேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தன்னை சந்தேகநபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீசை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியை சந்தேக நபராக பெயரிட்ட கோட்டை நீதவான் நீதிமன்றம், 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மைத்திரிபால சிறிசேனவை உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களில் சிறீசேனாவை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடுமாறு கோரிய தனிப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான தேசிய கத்தோலிக்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவரால் இந்த தனியார் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

கொழும்பு – அவிசாவளை வீதியில் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான வீதி வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படும்.

சனிக்கிழமை (01) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 05.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் தமது தேவைகளுக்காக வீதியைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்.

கடுவெலயிலிருந்து ஒருகொடவத்தை வரையிலான நீர் குழாய்களின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவோருக்கு பின்வரும் மாற்று வழிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வெல்லம்பிட்டி சந்தி ஊடாக கொலனாவ ஊடாக கொதட்டுவ நகருக்கு சென்று அங்கிருந்து கொட்டிகாவத்தை சந்தியை அடைந்து அவிசாவளை வீதியில் பிரவேசிக்க முடியும்.

அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் கொத்தடுவ நகரை கொட்டிகாவத்தை சந்தி வழியாக சென்று கொலன்னாவை வழியாக வெல்லம்பிட்டி சந்திக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

172 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் நான்கு பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 160 மில்லியன் ரூபா பெறுமதியான 7.5 கிலோ தங்கத்துடன் மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை ஓமானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கத் தகடுகளை தங்களுடைய பயணப் பொதிக்குள் மறைத்து வைக்க முற்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே விமானத்தில் வந்த மற்றுமொரு பயணி ஒரு கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd