web log free
June 29, 2025
kumar

kumar

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று (09) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்ட அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

மாங்குளம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரொருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று(08) தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாம் இரு தடவைகள் குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி சாட்சியமளித்துள்ளார். சிறுமியின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளியான இளைஞருக்கு 10 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.

20,000 ரூபா அபராதத்தையும் செலுத்த வேண்டும் என குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவருக்கே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் பாடசாலைக்கு சென்ற 10 வயதான சிறுமியை குறித்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பதவி விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச பதவி விலகியதால் அந்த இடத்திற்கு கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அது முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி எனவும் அறியமுடிகிறது.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை தொடர்பான சட்டமூலத்தை நாளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா குறித்து எந்த தொழிற்சங்கத்திடமும் கருத்து கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நாளை காலை வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் படிப்படியாக செயலிழந்துவிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளை மீறி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் கிடைக்காது எனவும், அத்தியாவசிய சேவைகளுக்காக உள்ள ஜெனரேட்டர்கள் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் 3500 லீற்றர் டீசல் அடங்கிய எரிபொருள் பௌசரை மறைத்து வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாமில் STF குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக STF தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு ரூ. 1.4 மில்லியன். காலியைச் சேர்ந்த சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) தம்மைப் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அரச ஊழியர்கள் தங்கள் தகவல்களை உள்ளிட முடியும் என்றார்.

அரச உத்தியோகத்தர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு மிகவும் அவசியமான அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான விரைவான திட்டம் இது என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வேலைகளைப் பெற ஆர்வமுள்ள அரச அதிகாரிகள் இன்று இரவு 9:00 மணி முதல் SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது விபரங்களை உள்ளிட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையின் சாதாரண விலையை விட 35% குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை வாங்குகின்றன என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் பேசியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சித்தாந்தம் காரணமாக ரஷ்யாவின் கோரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"டாலர் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது, அதேசமயம் நாங்கள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் வாங்கலாம். அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணுவதற்காக ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துவிட்டோம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்

LITRO Gas Lanka Ltd நிறுவனம் நாளைய தினம் உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளது.

புதிய எரிவாயு இறக்குமதி வந்தவுடன் சில நாட்களுக்குப் பிறகு எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd