web log free
June 26, 2025
kumar

kumar

மன்னாரிலுள்ள புனித பூமியொன்றை அண்மித்த பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ட்ரோன் கமராவை பறக்கவிட்ட நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் பிரகாரம், தேவையற்ற விதத்தில் ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலங்கைக்குள் ட்ரோன் கமராவை பயன்படுத்த சிவில் விமான சேவை அதிகார சபையில் அனுமதி எடுக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசு உறுதியளித்த திருத்தங்கள் இடம்பெறவில்லை என்ற விடயங் கள் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 பக்க அறிக்கையில் இலங்கைமீது மேலதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அறிக்கை குறித்து மார்ச் 3ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இந்த அறிக்கை ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி பிரஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது. இதுதவிர, 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக இந்த விவகாரம் உள்ளடக்கப்பட் டுள்ளது. இந்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட் டுக்களை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்தமை சட் டமா அதிபர்மீதான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள்மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

 

இன்றைய தினம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 போதிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணம்.

 இதன்படி, தென் மாகாணத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 ஏனைய மாகாணங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை பிரதேச அடிப்படையில் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.

 இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பில் நடைபெறுகிறது. 

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக, கொவிட் தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை எனவும், உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொவிட் அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் வாரத்திற்குள் எரிபொருளை ஏற்றி வரும் 5 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்முலம் நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருக்கும் என தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபைக்கும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்குவதற்கு CPC தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மின்சார சபை எரிபொருள் இருப்புக்களை பெற ரூபாவில் செலுத்த வேண்டும் என விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கமைய 155 வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் சரவஸ்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது எனவும் கூறினார்.

3 மாதங்களுக்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகுப்புவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ,வங்கதேசத்திலோ,ஈரானிலோ,ஈராக், இந்தோனேசியாவிலோ சட்டப்பூர்வ முத்தலாக் கிடையாது என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது மதச்சார்பற்ற தேசத்தில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் அளித்துள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்.

லாஸ்லியா கிளாமர் லுக்கில் தற்போது, வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

இவர் நடத்தும் போட்டோஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா தன்னுடைய பின்னழகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளதால், அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd