ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் துபாய் சென்றிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவரை தவறான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டதாகவும், அரசியல் இலாபங்களுக்காக இது திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்களைக் கூறுமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் இதனால் தமக்கு எதிரான வழக்குகளில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100 வரை கனமழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75 டிகிரி அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும், இடியுடன் மழை பெய்யக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
பௌத்தம் மதம் மற்றும் உயிர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற ஆயர் இன்று கைது செய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான முதலாவது அறிக்கை இன்று (01) பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பாராளுமன்றத்தில் இருந்து 3 மாத காலத்திற்கு தடை செய்யுமாறு பிரதி சபாநாயகர் குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அதனை ஒரு மாத காலத்திற்கு குறைத்துள்ளதாக சம்பவத்துடன் தொடர்புடைய ரோஹன பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோதும் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
இதேவேளை, 3 கிரிக்கெட் மைதானங்களில் எல்இடி திரைகள் பொருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தியதோடு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் அதில் தலையிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தொப்புளைச் சுற்றி இருபத்தொரு விஷர் நாய் கடி ஊசி செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தினமும் நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், இது விஷர் நாய் கடிபட்ட மனிதனைப் போன்றது என்றும் அவர் கூறினார்.
எனவே சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் விஷர் நாய் கடி பிரிவின் ஊடாக எதிர்கட்சி தலைவருக்கு இருபத்தி ஒரு தடுப்பூசி போடப்பட வேண்டும் என தெரிவித்த அவர், எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு, பதினான்கு விஷர் நாய் கட நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்க்கட்சித் தலைவரை தனது முழு நாடாளுமன்ற வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.
ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பார்வையிட முடியும்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் ஈ. ஷால்க் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
தென்னாப்பிரிக்க தூதுவர் தனது அரசியல் செயலாளருடன் இணைந்து கூட்டு முயற்சித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றய தினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதுடைய கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் திருட்டில் ஈடுபடும் போது சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.