web log free
July 14, 2025
kumar

kumar

சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல் கொடுக்கல் வாங்கல்களை தடுப்பதாக  கூட்டங்களில் கூறினாலும் சமகி ஜன பலவேகய நாட்டையே திவாலாக்கிய ராஜபக்ஷ குடும்பத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து தேவையான சட்டத்தை முன்னெடுத்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

திருடர்களுடன் சமகி ஜன பலவேகவுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால், எதிர்க்கட்சியில் இருந்தே திருடர்களைப் பிடிப்பது தொடங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கோப்பினை காட்டி பொய்யான காட்சிகளை காட்டி மக்களை ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மினுவாங்கொடை மக்கள்  சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய இணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கலாநிதி ஹர்ஷத சில்வா, ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் போட்டு பணம் தேட முயற்சித்த கணவரை அவரது மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று வெல்லவ பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் குளியலறையில் மகள் குளிக்கு காட்சியை வீடியோ செய்த நபர் மீது மனைவி மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர், வெளியே வந்த போது மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்துள்ளதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 10 நிமிடத்தை வழங்குமாறு கேட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கருத்து தெரிவிக்க கால அவகாசம் தேவை என தெரிவித்தார்.

அரசாங்கம்  நேரம் வழங்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் நேரத்தை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

 

மொட்டு கட்சி வருடாந்த நிகழ்வுக்காக கட்சி உறுப்பினர்களை கூட்டிச் செல்லும் போது அமைப்பாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இருவரையும் புறக்கணித்தமையே இதற்குக் காரணம் என மேல்மாகாண பிரதம அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையினால் பல ஆசன அமைப்பாளர்கள் இந்த வருடம் மொட்டு வருட பூர்த்தி மாநாட்டை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மாவத்தை கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுக் குழு வெற்றி பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேறு எந்த கட்சி ஆதரவு குழுவுக்கும் ஒரு உறுப்பினர் பதவியைகூட வெல்ல முடியவில்லை. 

துபாயில் நடைபெற்ற கட்சிகளின் 28வது மாநாட்டின் (COP28) போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், உலகின் வெப்ப மண்டலப் பகுதியில் இலங்கையின் முக்கிய பங்கை மேம்படுத்துவதற்கும் கூட்டு முயற்சிகளை பற்றி கலந்துரையாடல்கள் நடந்தன.

இந்த சந்திப்பின் போது, கேட்ஸ், வலுவான மற்றும் காலநிலைக்கு ஏற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க BMGF இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். இலங்கையில் ஏற்கனவே முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ் அறக்கட்டளை, நாட்டுடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்த உறுதியளித்தது.

விவசாய நவீனமயமாக்கல் மற்றும் விவசாயத்திற்கான தரவு அமைப்புகளை நிறுவுதல் ஆகியவை கவனம் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் காலநிலை மற்றும் தழுவலில் இலங்கையின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இந்த நிலையான திட்டங்களை முன்னெடுப்பதில் BMGF இன் ஆதரவைக் கோரி, COP28 இல் இலங்கையின் பசுமை முயற்சிகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னிலைப்படுத்தினார். அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, உலகளாவிய முயற்சியில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க இலங்கையின் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஒரு விரிவான மற்றும் தாக்கமிக்க கூட்டாண்மையை உறுதி செய்வதற்காக BMGF உடனான ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து இக்குழு விவாதித்தது.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்காக மேலும் 20 கட்சிகள் இணைத்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சிகளைத் தவிர, பல பொது அமைப்புகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன.

கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளுடனும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை மாத்திரம் தமது கூட்டணியில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் செயலாளர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே 5-ஆம் மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருள்களில் விலை உயா்வு ஆகியவற்றின் காரணமாக, அந்த நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் தொடா்ந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகின்றனா்.

இந்த நிலையில், தனுஷ்கோடி 5-ஆம் மணல் திட்டு பகுதியில் அகதிகள் இருப்பதாக தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறைக்கு மீனவா்கள் சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் படகு மூலம் அங்கு சென்று, 2 குடும்பங்களைச் சோ்ந்த 7 பேரையும் மீட்டு, தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனா். அவா்களை அங்கிருந்து மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா்கள் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த ஞானஜோதி (46), இவரது மகன் ஜித்து (12), மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த அமுதன் (32), இவரது மனைவி கீதாஞ்சனா (29), மகன் லிக்சன் (12), மகள்கள் நிவேதா (5), கேசவி (2) ஆகியோா் என்பதும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அவா்கள் படகு மூலம் தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதிக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 7 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் துபாய் சென்றிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவரை தவறான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டதாகவும், அரசியல் இலாபங்களுக்காக இது திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்களைக் கூறுமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் இதனால் தமக்கு எதிரான வழக்குகளில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd