web log free
December 15, 2025

லித்துவேனியா எல்லையில் மர்மமாக உயிரிழந்த இலங்கைப் பிரஜை

பெலாரஸ் - லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திகதி லித்துவேனிய நாட்டின் எல்லையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள புதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பனவற்றின் மூலம் குறித்த நபர் 29 வயதான இலங்கைப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவரது மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd