web log free
April 20, 2024

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் இத்தகைய மகத்துவம் கொண்ட ஒருவரால் வழிகாட்டப்பட்டதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்த எனது அன்புச் சகோதரரே, உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! என அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தனது சகோதரரும் இந்நாட்டு பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், இன்று குடும்பத்தில் ஒரு சிறப்பு நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தி. நீங்கள் எங்களை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியதன் மூலம், Y.K. ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் எனக்கு ஒரு உத்வேகமாகவும் சிலையாகவும் இருந்தீர்கள். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

 

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியானது போக்குவரத்து செய்யமுடியாத வகையில் வீதி நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்தும் 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வடக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தினால் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திகதி லித்துவேனிய நாட்டின் எல்லையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள புதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பனவற்றின் மூலம் குறித்த நபர் 29 வயதான இலங்கைப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவரது மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பின்னணியில் அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 70-90 மெட்ரிக் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். எனினும், இந்த தொகை நாட்டின் எரிவாயு தேவையில் 5 வீதம் முதல் 10 வீதம் வரையே பூர்த்தி செய்யமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் பேஸ் கிங் லசித் மலிங்கா அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

1983 ஆகஸ்ட் 28 இலங்கையின் காலி நகரில் பிறந்த லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வலது கை வேகபந்து வீச்சாளர் என்ற தனிப்பட்ட பந்து வீச்சு திறனைக் கொண்டவர். இவ்வாறான சிப்பான தனிப்பட்ட திறமையால் உலகெங்கிலும் பல தரப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக 'சிலிங்க மாலிங்க' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தார்.  இவர் இன்று வரை சிறந்த பந்துவீச்சாளர் என்ற தன் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார்.

இவரின் சாதணைகள் ஏராளம். இலங்கையை கிரிக்கெட் வாழ்வில் நிலைநிறுத்தியவர்களுள் முக்கியமான இடம் மலிங்கவுக்கு உண்டு. பன்னாட்டு இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபதுக்கு 20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியில் நட்சத்திர பௌலர் லஷித் மலிங்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற மலிங்காவுக்கு அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. விரைவில் அணிக்குத் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் நேற்று தன் டுவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக் பக்கத்திலும்  தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன் என்பதை தன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

"விளையாட்டின் உணர்வை உயர்த்துவதற்காக வளரும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன்," என்று அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

Page 1 of 4