ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் வழிநடத்தல் குழு கூட்டம் நாடாளுமன்றத் அவைத் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா எம்.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான இரண்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அரசாங்கத்திற்கு உதவ முன்வரும் குழுவொன்று தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (09) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையின் நிறைவேற்றுத் தரம் அல்லாத சில சேவைகளில் உள்ள ஒரு சில தொழிற்சங்கங்கள் 2024 ஜூலை 08 மற்றும் 09 திகதிகளில் சுகயீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தன.
கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்நோக்கியிருந்த நாடு கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான பொருளாதார கொள்கை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கியது.
தற்போதைய நிதி நிலைமையின் கீழ், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போது வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பையோ கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு சாத்தியமில்லை எனவும் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்த மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. மறுபுறம், சில அரச ஊழியர்கள் மேலதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் அனைவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எவ்வாறாயினும், இதுபோன்ற நியாயமற்ற பணிப் புறக்கணிப்புக்களைச் செய்யாமல், 2024 ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அரச உத்தியோகத்தர்களைப் பாராட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக 2024 மே 04ஆம் திகதி தொழில்நுட்ப அமைச்சினால் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இது 28 வருடங்களின் பின்னர் திருத்தப்பட்டுள்ளது.
இதுவரை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில், போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந்தத் திருத்தச்சட்டமூலம் வழங்குகின்றது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார்.
பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தினார்.
மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசிய பிரதமருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.
இதேவேளை, மலேசிய நிதியமைச்சர் அமீர் ஹம்சா, பிரதமர் துறை அமைச்சர் (இஸ்லாமிய சமய விவகாரங்கள்) நைம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.
தனது வீட்டையும் அண்மித்த பகுதியையும் சுற்றி இரவு வேளைகளில் ஆயுதம் ஏந்திய கும்பல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர், தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கூறுகிறார்.
இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலையில் துணியை மூடியவாறு ஹெல்மெட் அணிந்து பயணிப்பது அவரது வீட்டின் கேமரா அமைப்பில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் பலனில்லை எனவும், முன்னரே முறைப்பாடு செய்ததையடுத்து சுமார் இருநூறு பாதுகாப்புப் படையினர் தனது வீட்டை முற்றுகையிட்டு வீட்டைச் சோதனையிட்டதாகவும் எம்.பி. கூறினார்.
இது குறித்து தாம் பொலிஸாரிடம் தெரிவிக்காவிட்டாலும், தனது பாதுகாப்பின்மை மற்றும் உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்ததாகவும் அவர் கூறுகிறார்.
தென்னாப்பிரிக்கா அணியுடனான போட்டிக்கு முதல்நாள் இரவு முழுவதும் இலங்கை அணி வீரர்கள் மது அருந்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பயிற்சியாளர் மற்றும் தற்போதைய அணியில் சுமார் எட்டு முன்னணி வீரர்களை நிர்வகிக்கும் முன்னணி வீரர் மேலாளர் இருப்பதாகவும் மார்னிங் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
ஐசிசி விதிகளை மீறி ஒரு வீரர் மேலாளர் எப்படி தேசிய அணி விடுதிக்குள் நுழைய முடியும்?
இலங்கை கிரிக்கெட்டில் முகாமையாளர்களின் ஈடுபாடு இலங்கை கிரிக்கெட்டின் அண்மைக்கால வீழ்ச்சிக்கு ஓரளவு பங்களித்துள்ளதாக பலரது அபிப்பிராயம்.
இலங்கையில் கிரிக்கெட்டை புத்துயிர் பெற, உள்ளூர் கிரிக்கெட் அதிகாரிகள் இந்த நிகழ்வை தீவிரமாக கவனிக்க வேண்டும்.
விடியும் வரை மது அருந்தும் வீரர்கள் மறுநாள் காலை ஆட்டத்தில் தங்கள் கடமையை எப்படிச் செய்வார்கள்?
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாவிட்டால், இரண்டாவது விருப்பத்தேர்வு வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தீர்க்கமாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில், ஒரு வாக்காளர் ஒருவருக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார், மேலும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பத்தேர்வை வழங்குவது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
எந்தவொரு வேட்பாளரும் 50% அல்லது ஒரு மேலதிக வாக்குகளைப் பெறாவிட்டால், மொத்த இரண்டாவது விருப்பத்தேர்வில் பாதிக்கு மேல் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்கு இரண்டாவது விருப்புரிமை வழங்குவது புதிய அனுபவமாக அமையலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துருகிரிய, ஒருவல சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 'கிளப் வசந்த' என்ற நபர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பாடகர் கே.சுஜீவாவும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (8) பணிக்கு சமூகமளித்தாலும் நாளை (9) நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை சுகயீன விடுப்பு குறித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு முழுவதும் 230க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
"எனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இதொகாவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், ஓரமாக போய் விளையாட வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மனோ எம்பி மேலும் கூறி உள்ளதாவது;
பட்டாசு கொழுத்தி, மண் சோறு பொங்கி, குழந்தைகள் ஆர்ப்பாட்ட விளையாட்டு விளை ஆடட்டும்.
ஆனால், வீதி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக போய், விளையாட வேண்டும் என இந்த சிறுவர்களுக்கு அறிவுரை கூறுகின்றேன் என்றார்.