web log free
December 16, 2025
kumar

kumar

மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாட்டை ஆள முடியாது என முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சனிக்கிழமை தெரிவித்தார்.

கேகாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மக்கள் விடுதலை முன்னணியின் பேரணிகளில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டமையால் சிலர் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

மக்கள் விடுதலை முன்னணியில் சுமார் 70,000 உறுப்பினர்கள் உள்ளனர், இதனால் அவர்கள் மற்றவர்களைக் கவருவதற்காக எண்களைக் காட்ட முடியும். இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. வருடக்கணக்கில் அப்படித்தான் செய்து வந்தார்கள். ஆனால் இறுதி வாக்கு எண்ணிக்கைக்கு வரும்போது அவர்களின் தந்திரம் மட்டுமே அம்பலமாகும். அவர்கள் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் கூட, அவர்களின் பேரணிகளுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான ஒரு பொறிமுறை உள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாங்கள் வெற்றிபெறப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி முகநூல் அலையை உருவாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் கூட குருநாகலில் மக்கள் விடுதலை முன்னணி 42,000 வாக்குகளையே பெற முடிந்தது. இந்த முறை அவர்கள் அதிகபட்சமாகப் பெறுவார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போதும் அவர்கள் குருநாகலில் இருந்து 120,000 முதல் 130,000 வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். அதன் மூலம் அவர்களால் அதிகாரத்தைப் பெற முடியாது.

"தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர்களால் ஒரு நாட்டை ஆள முடியாது. தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தேவையான உதவிகளைப் பெறுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அனுரகுமார திஸாநாயக்கவால் முடியாது. எரிபொருளைக் கொண்டு வர சர்வதேச சமூகத்தின் ஆதரவை அவரால் பெற முடியாது. அவருக்கு சர்வதேச தொடர்புகள் இல்லை. பசில் ராஜபக்ச 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ளார். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்தோம். அனுரவினால் அதைச் செய்ய முடியாது.மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் யார் என்பதை குறிப்பிடுமாறு நாங்கள் சவால் விடுகிறோம். அத்தகைய பதவிகளை வகிக்கும் திறன் கொண்ட நபர்கள் அவர்களிடம் இல்லை. என்றும்  ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ கூறினார்.

சீனா இலங்கையின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட இலங்கை அனுமதிக்காது என்பதால், இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரி, கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இலங்கை தமது மண்ணில் நடக்க அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக மூன்று பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வெரகம பிரதேசங்களுக்கு நாளை (13) இரவு 8:00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6:00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

தற்போது திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனைவரது ஆதரவும் தேவை என்றும் அவ்வாறு செய்யாத அனைத்து தரப்பினர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கு தேவையான 80 கோடி ரூபா நிதி திறைசேரியிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.

எனினும் இதற்கு முன்னர் கோரப்பட்ட பத்து கோடி ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

இந்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 வார இறுதி ஒரு தேசிய பத்திரிகையில் கருத்து தெரிவிக்கும் போது.,

தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவர்  என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரவுக்கு ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையான சர்வதேச தொடர்புகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குறைந்தபட்சம் மாலைதீவில் கூட எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் ,இன்று மக்கள் விடுதலை முன்னணி மக்களை பயமுறுத்தி கூட்டங்களுக்கு
அழைப்பதாகவும் கூட்டங்களுக்கு வராதவர்களை அடுத்த தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது என்று கூறி மக்களை பயமுறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு திறைசேரிக்கு தகுதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 770 மில்லியன் ரூபாவை கோரிய போதிலும், இதுவரை நிதியமைச்சு அந்த தொகையை வழங்கவில்லை.

வெல்லவாய நகருக்கு அருகில் இன்று (11) காலை 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மொனராகலை மற்றும் புத்தளயை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மொனராகலை, புத்தள, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தை தாங்கள் உணரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வலம்புரி சங்கு ஒன்றினை நுவரெலியா அதிரடிப் படையிரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு (10) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் சுருவத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு குறித்த வீட்டினை சோதனை செய்த போது மிகவும் சூட்சுமமான முறையில் அரிசி பாத்திரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வலம்புரி சங்கினை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்கள் இன்று (11) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd