web log free
December 16, 2025
kumar

kumar

ரிசப ராசி அன்பர்களே 

வாழ்க்கைத்துணை உறவினர்கள் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதக மாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தரு வார்கள். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

 

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். சூரிய பகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாய மும் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். விநாயகரை வழிபட வெற்றிகள் வசமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி அன்பர்களே!

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற் சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த் தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று (13) தீர்மானித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினங்களில் அவர்கள் பாராளுமன்றத்தின் பொது காட்சியகங்களை பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கோவிட் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக, பாராளுமன்றத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னரே நாடாளுமன்றக் குழு மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.

பிலியந்தலை மடபட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இரண்டு பிக்குகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு பிக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பிக்கு மற்றொரு பிக்குவால் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விகாரைக்கு கிடைத்த பிரிகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.

120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 40 பக்க CR புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு புத்தகம் 230 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியை 06 மாதங்களுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை திணைக்களம் ஒரு வருட காலத்திற்கு நீட்டித்துள்ளது.

தற்காலிக 06 மாத உரிமம் பெற்றவர்கள், உரிமத்தின் செல்லுபடியை நீட்டிக்க, வெரெஹராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம் அல்லது அவர்களின் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் வகையிலான நுழைவுச்சீட்டொன்றின் பிரதி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

என்ற போதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போலி நுழைவுச்சீட்டு என கொழும்பிலுள்ள இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் தாமரை கோபுரத்திற்குச் சென்று, நுழைவுச்சீட்டுக்களை வாங்கி உங்கள் கண்களால் நீங்களை இதனை பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் இலங்கைக்கான சீன தூதரகத்தால் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தீர்மானிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை பெறுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 2022 மே 1 தொடக்கம் 2023 ஏப்ரல் 30 வரை உத்தியோகபூர்வ முறைகளினூடாக 3000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு, அனுப்பப்பட்ட தொகையை 50 சதவீதம் குறைவான CIF மதிப்புள்ள மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையில், 2022 மே 1 தொடக்கம் 2022 டிசம்பர் 31 வரை 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பரிமாற்றம் செய்தவர்களுக்கு மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மின்சார கார், டபுள் கேப், வேன் அல்லது டிப்பர் ட்ரக் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உரிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய அனைத்து ஆவணங்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31ஆம் திகதி சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமார் இரண்டரை இலட்சம் இளைஞர்கள் புதிதாக வாக்களிக்கும் உரிமையைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்யத் தயாரானதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் நேற்று  (13) கையளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் குருநாகலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் குற்றம் சுமத்தினார்.

முன்னதாக, நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின்படி நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை கையளித்த நீதிபதி, அவர்களின் கைரேகைகளை எடுத்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

2009 பெப்ரவரி 1ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி ஜனாதிபதியைக் கொல்லத் திட்டமிட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உண்மைகளை முன்வைத்ததுடன், தமது தரப்பினர் 13 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர்கள் 13 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை தனித்துவமான விடயமாகக் கருதி, சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை மீதான உத்தரவை அக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், வழக்கை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd