web log free
April 26, 2025
kumar

kumar

 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை தற்கொலைக்கு காரணம் தனது செயற்பாடு என்று அயலவர்கள் பேசத்தொடங்கியதால் சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,692 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 1263 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று உத்தரவிட்டார்.

விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் பலர் உள்ளமை விசாரணைகளில் புலனாவதாக மன்றில் இன்று தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் விடயங்களை முன்வைப்பதற்கு போதிய கால அவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் மற்றுமொரு ஊழியரையும் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார்.

இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர்கள் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென்பது விசாரணைகளில் தெரியவந்ததால் அவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷர்லி ஹேரத் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதுவரை நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்படவில்லையென, பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தெரிவித்தார்.

சந்தேகநபரான குறித்த வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு அவர் விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தேவாலயத்தின் எந்த ஊழியரும் தொடர்புபடவில்லையென கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசாரணைகளின் ஆரம்பத்திலேயே தெரிவித்த விடயம், இன்று வரை நிரூபணமாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் 32 வயதுடைய பெண் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 28 வயதான பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனி பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான குறித்த வர்த்தகர், ஜேர்மன் பெண்ணுடன் கடந்த 6 வருடங்களாக நண்பராக இருந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.ஜேர்மன் பெண்ணின் தந்தை முன்னாள் கடற்படை அதிகாரி எனவும் அவர் இலங்கையர் எனவும் தாய் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கை வந்த அவர், தங்காலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.இதேவேளை, சந்தேகநபருடன் இரண்டு வாரங்களாக குறித்த பெண் கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 6ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி குறித்த வர்த்தகருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.அன்றைய தினம் இரவு விடுதிக்கு சென்ற இருவரும் மறுநாள் காலை வரை மது அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது அந்த பெண்ணின் கடன் அட்டை தொலைந்து போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


அதன் பின்னர் இரவு குறித்த பெண்ணை மயக்கமடைய செய்யும் வகையில் போதை மாத்திரையை குறித்த இளைஞன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் காலை எழுந்து பார்க்கும் போத தான் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உரிய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள சில கோரிக்கைகளுக்குத் துரிதமாக தீர்வு வழங்க முடியும். இது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சில கோரிக்கைகள் பற்றி கவனம் செலுத்துவதற்காக இரண்டு வாரங்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 7 கோரிக்கைகளை முன்வைத்து 18 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால், நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

லங்கா இந்திய நிறுவனம் தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32.50ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம் நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெருமவிடம் வினவியபோது, ​​இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதன் காரணமாக எரிபொருள் விலை தொடர்பில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அத்தி மர இலைகளில் 3 நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிரிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

அத்திப்பழத்தை ஆராய்ந்த பின்னர் அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் 4 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.


இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். அத்திப்பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும்.

இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது. சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்

பிப்ரவரி மாதம் 8-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

8-ம் தேதி செவ்வாய் கிழமை :

 ரதசப்தமி

* சூரிய சந்திரர் விரதம்
* சித்தயோகம்
* பீஷ்மாஷ்டமி
* குரங்கனி முததுமாலையம்மன் பவனி
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

9-ம் தேதி புதன் கிழமை :

* கார்த்திகை விரதம்
* பெருவயல், திருத்தணி தலங்களில் முருக பெருமான் பவனி
* சந்திராஷ்டமம் - சித்திரை

10-ம் தேதி வியாழக்கிழமை :

* திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் மரத் தோளுக்கினியானில் பவனி
* திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டாள் தெப்பம்
* சந்திராஷ்டமம்-சுவாதி

11-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* சுபமுகூர்த்தம்
* சித்தயோகம்
* நத்தம் மாரியம்மன் பால்காவடி உற்சவம்
* திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கருட வாகன பவனி
* சந்திராஷ்டமம் - விசாகம்

12-ம் தேதி சனிக்கிழமை :

* சர்வ ஏகாதசி
* பெருவயல் முருகப்பெருமான் மயில் வாகன பவனி
* காரமடை அரங்கநாதர் சிம்ம வாகன பவனி
* வளர்பிறை ஏகாதசி
* சந்திராஷ்டமம் - அனுஷம்

13-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* சித்தயோகம்
* விஷ்ணுபதி புண்ணியகாலம்
* வராகத்துவாதசி
* திருமெய்யம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்
* மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் பவனி
* சந்திராஷ்டமம் - கேட்டை

14-ம் தேதி திங்கள் கிழமை :

* வராக கல்பாதி
* சுபமுகூர்த்தம்
* பிரதோஷம்
* நத்தம் மாரியம்மன் பவனி
* சந்திராஷ்டமம் -மூலம்

சிறிய மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் ஆச்சரியத்தக்க பலன்களை அடையலாம்.


பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப மர துண்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சீப்பை உபயோகித்தால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.


தலை முடிக்கு வேப்பம் சீப்பு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி நிறைய பேரிடம் இருக்கிறது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களை கொண்டது. வேப்ப மர சீப்பு பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை பயன் படுத்துவது தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd