[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திதுப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதில் அந்த அதிகாரியின் நடவடிக்கையால்தான் வன்முறை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த அதிகாரியின் செயலால் நாங்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம். நாங்கள் ஒரே அணியாக இந்த சீருடையை அணிகிறோம். அவரைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன?” என்று அமைச்சரிடம் கூறினர்.

மேலும், அந்த கலவரத்தின் போது கைதிகள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.

அந்த அதிகாரியை “வீரர்” எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீது சுமத்தப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதியான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதேவேளை இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

spot_img

Latest articles

இன்று (20) முதல் முட்டை விலை உயர்வு

இன்று (20) முதல் முட்டை விலையை உயர்த்துவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு வெள்ளை...

‘தர்மன்’ திரைப்படத்தில் இணையும் ருக்மிணி வசந்த்?

​கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் தான். உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ்...

கச்சா எண்ணெய் விலை

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதன் விளைவாக இன்று (20)...

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...

More like this

இன்று (20) முதல் முட்டை விலை உயர்வு

இன்று (20) முதல் முட்டை விலையை உயர்த்துவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு வெள்ளை...

ஜூலை 23 அன்று சஜித், ரணில், நாமல் சந்திப்பு

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதன் மூலம் அரசு நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு...

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...