[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திதுப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதில் அந்த அதிகாரியின் நடவடிக்கையால்தான் வன்முறை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த அதிகாரியின் செயலால் நாங்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம். நாங்கள் ஒரே அணியாக இந்த சீருடையை அணிகிறோம். அவரைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன?” என்று அமைச்சரிடம் கூறினர்.

மேலும், அந்த கலவரத்தின் போது கைதிகள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.

அந்த அதிகாரியை “வீரர்” எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீது சுமத்தப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதியான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதேவேளை இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

spot_img

Latest articles

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

More like this

நாட்டின் ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெளியான தகவல்

- 2025ல் ஜனாதிபதி தங்கவில்லை; ஆனால் 3,089 பேர் தங்கியுள்ளனர் – தேசிய கணக்காய்வு அலுவலகம் 2025 ஆம் ஆண்டில்...

“நீதித்துறையை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது”

– விமல் வீரவன்ச குற்றச்சாட்டு தற்போதைய அரசு நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – 55 வயதுடைய நபர் காயம்

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் மேலதிக...