ஜூலை மாத மக்கள் மனநிலை ஆய்வு
ஜூலை மாதத்திற்கான மக்கள் விருப்பம் மற்றும் ஆதரவு தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதான பொதுமக்களின் திருப்தி 75.5% என்ற உயர்ந்த நிலையில் இருப்பதாக மாற்றுக் கொள்கைகள் மையம் (CPA) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டில் திறம்பட ஆட்சி நடத்தும் திறன் கொண்டுள்ளது என்ற நம்பிக்கை இலங்கையர்களின் பெரும்பான்மையினரிடையே நேர்மறையான நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையர்களில் 62.8% பேர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திறமையான ஆட்சியை வழங்கும் திறன் கொண்டுள்ளது என்ற விடயத்தில் தாங்கள் திருப்தி அடைந்துள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.



