[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஅரசு ஊடக விளம்பரங்கள், அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு செயல்படுகிறது

அரசு ஊடக விளம்பரங்கள், அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு செயல்படுகிறது

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளும் தற்போது தங்களது கொள்ளளவை மீறி நிரம்பியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைகளின் நலன் மற்றும் கைதிகளின் நலன்புரி தொடர்பில் நேரடியாக தலையிட வாய்ப்பு பெற்றிருந்தது. ஆனால், மக்களை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதைத் தவிர, சிறைகளில் உள்ள கைதிகளின் நலன் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.

தற்போது அனைத்து சிறைச்சாலைகளும் தங்களது கொள்ளளவை விட அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளன. 800 பேரை மட்டுமே தங்க வைக்கக்கூடிய சிறைகளில் 4,000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சூழலில் மனிதாபிமானமான வசதிகளை வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.

மேலும், அண்மைய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி சிறைகளுக்குள் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிறை கைதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு ஊடக விளம்பரங்களையும் அரசியல் இலாபங்களையும் நோக்கமாகக் கொண்டு நாளுக்கு நாள் பலரை விளக்கமறியலில் அடைத்து வருவதாகவும், அது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது பொதுமக்கள் மீதான நடவடிக்கைகளாகவோ இருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த பிரச்சினையில் அரசு உடனடியாகவும் தெளிவாகவும் தலையிட வேண்டும் என்றும், இதுகுறித்து கடந்த காலங்களிலும் நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனை அறிக்கைகள் கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த அறிக்கைகள் வரும்வரை பலர் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பின்னர் சிலரிடம் போதைப்பொருள் இல்லை என்பது தெரியவரினும், அதற்குள் சிறைகள் மேலும் நிரம்பிவிடுகின்றன என்றார்.

சிறைச்சாலைகளில் போதுமான அதிகாரிகளும் பணியாளர்களும் இல்லை. தேவையான அதிகாரிகளை நியமித்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் பெயரில் காவல்துறையினர் கைது செய்யும் நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்படுவதால், தற்போதைய நிலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தங்களுக்கு விருப்பமான ஆணையரை நியமிக்கும் வரை அரசு காத்திருக்கிறது என்றும், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னாலும் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியல் நோக்கங்களுக்காக மக்களை சிறையில் அடைப்பதோடு, ஊடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அப்பாவி மக்களை போதைப்பொருள் வைத்திருப்பதாகக் கூறி விளக்கமறியலில் வைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒருமுறை அல்லது இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையில், அதற்குப் பதிலாக அனைவரையும் சிறைகளில் அடைத்து சிறைகளை நிரப்பி வருகின்றனர் என்றார்.

அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டவர்களை சிறப்பு வார்டுகளில் தங்க வைப்பதால், மற்ற வார்டுகளில் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறைகளுக்குள் கடுமையான சமூகப் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது தங்களது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பலரும் சிறைகளில் இருப்பதால், அவர்கள் அடிக்கடி சிறைகளுக்குச் செல்வதாகவும், அங்கு நேரில் காண்பதும், கேட்பதும் இதுவே என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இறுதியாக, இந்த பிரச்சினைக்கு அரசு பொறுப்புடன் செயல்பட்டு உடனடி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக...

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23ஆம் திகதி வரும்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம்...

அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து...

இலங்கையில் கடும் தொழிலாளர் தட்டுப்பாடு: 10,000 வெளிநாட்டு தொழிலாளர்களை அழைக்க வேண்டிய நிலை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்...

More like this

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக...

இலங்கையில் கடும் தொழிலாளர் தட்டுப்பாடு: 10,000 வெளிநாட்டு தொழிலாளர்களை அழைக்க வேண்டிய நிலை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்...

ஜனாதிபதி அனுர தொடர்பில் 75.5% மக்கள் திருப்தி

ஜூலை மாத மக்கள் மனநிலை ஆய்வு ஜூலை மாதத்திற்கான மக்கள் விருப்பம் மற்றும் ஆதரவு தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜனாதிபதி...