– நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன
இலங்கையில் இனி வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும், நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்வது மாலிமா அரசே என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வேறு எந்த அரசியல் தரப்பிற்கும் இலங்கையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காது என அவர் வலியுறுத்தினார்.
கண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.



