பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



