[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஅதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது அந்த அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இதற்கு முன்பு சிறிகொத்தையோ அல்லது டாலி வீதியையோ மையமாகக் கொண்டு நாடு நிர்வகிக்கப்பட்டபோது அதுகுறித்து எவரும் கேள்வி எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஒரு அரசியல் கட்சிக்கு அதிகாரம் கிடைப்பது மக்களால் வழங்கப்படும் ஜனநாயக ஆணையின் அடிப்படையில்தான் என்றும், மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை தங்களது அரசியல் திட்டங்களை உருவாக்கி இந்த மக்கள் இயக்கத்தை பெலவத்தையை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பியதாகவும் அவர் நினைவூட்டினார்.

“அதிகாரம் கிடைப்பது ஒரு அரசியல் கட்சிக்கே. மக்கள் வாக்களிப்பதும் ஒரு கட்சிக்கே. அதன் பின்னரே அது அரசாங்கமாக மாறுகிறது. முன்பு சிறிகொத்தையிலிருந்து ஆட்சி நடைபெற்றது, டாலி வீதியிலிருந்தும் நடைபெற்றது. இப்போது அந்த அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது. அனைத்து திட்டங்களும் அங்குதான் உருவாக்கப்பட்டன; இந்த இயக்கமும் அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்கியதுபோல, இம்முறையும் மக்கள் தங்களது நம்பிக்கையை பெலவத்தையை மையமாகக் கொண்ட அரசியல் ஓட்டத்திற்கே வழங்கியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...

More like this

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...

ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்தில் 5 பேர்

ஹோமாகம, கட்டுவான  தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்....