WhatsApp மற்றும் Messenger போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தனிநபர்களிடமிருந்து கப்பம் பெறும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
தனிநபர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து உணர்வுபூர்வமான அல்லது தனிப்பட்ட காணொளிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைகளில் மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக அதன் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிமுகமற்ற நபர்களால் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இவ்வாறான மோசடியில் யாரேனும் சிக்கியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொறியியலாளர் சாருக தமுனுபொல அறிவுறுத்தியுள்ளார்.




